மரக்கிளைகள்
கூரைகளாய்
மழை பெய்கையில்
கிழிந்த குடைகளாய்
ஒதுங்க இடம் தேடி
அலையும் சாலையோர
மனிதக் கூட்டம்
தலைசாய்த்து வழியனுப்பும்
காக்கையின் கண்களில்
ஈரம்.

- வரத.இராஜமாணிக்கம், பழநி

Pin It