செருப்புகள் கூட
வணங்குதலுக்கு உரியவைதான்.
சில
கடிக்கும்
சில
அடிக்கும்.
செருப்புகள் பற்றிய
கதைகளை
அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள்...
வேப்பமரத்தில்
அண்டியிருக்கும்
பேயினை விரட்ட
செருப்புகளையே
கட்டி வைப்பார்களாம்...
எதிர்வினையாற்றலின்
அடையாளமாக.
இராமனின்
பாதம் அணிந்தபோது
அயோத்தியில்
சில காலம்
அரியணை ஏறியது...
சர்வாதிகார
மேலாண்மையின்
முகத்திலெறியும் போது
போராளிகளின் ஆயுதமானது!

Comments

2 comments

2
porselvi
அரியனை ஏறூம் செருப்பு ,ஆயுதமாகும் என்பது சிறப்பு
Mohan Babu
The poem is very good.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.