ஒரு பறவையின் சிறகு
உதிர்ந்து கிடக்கிறது.
உயரங்களில் ஊர்வலம் போன
மலரும் நினைவுகளில்
ஆழ்ந்தபடி...
பறவைக் கூட்டம்
கண்களை விட்டு மறைகையில்,
வானம் மட்டுமல்ல
மனசும் வெறுமையாகி விடுகிறது.
அந்திக்குக் கூடு திரும்பும் பறவை
பகலின் கடைசியழகு,
சிறகசைத்து விடைபெறுகிறது.
பறவைகள்
சுதந்திரத்தின் குறியீடு
அவற்றை மாமிசப் பார்வை பார்க்கிறது
அசைவ மனசு
மேகங்கள் வானத்தின்
அக அழகு,
பறவைகள் அதன்
புற அழகு.
உயரப் பறப்பதை எந்தப் பறவையும்
சாதனையாகக் கூறிக்கொள்வதில்லை
அதுவே அதன் இயல்பு.
இரையும் குடிநீரும்
தேடிக் களைத்த பறவைக்கு
இளைப்பாற வெயில் விரிந்த
கட்டிடங்களே இன்று மிச்சமிருக்கிறது
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
கருக்கல் விடியும் - ஜூலை 2012
- விவரங்கள்
- கோ.அருணகிரி
- பிரிவு: கருக்கல் விடியும் - ஜூலை 2012