பெயர்க்க முடியாத
பெருங்கோபத்துடன்
நெருப்புக் குழம்பென
திரண்டன விழிகள்
நீளும் துரோகத்தின் கைகளை
எதிர்த்து
கொடுங்கோன்மையின் குருதிக் கவிச்சி
நெஞ்சைப் பிசைய பிசைய
நரம்புகள் இறுக்கப்பட்டு
செத்து மடிந்தது மனித உரிமை
வல்லாண்மை கழுகின்
கூர்நகப் பிராண்டலில்
ரத்தக் கீறல்களாய் மாறியிருக்கின்றன
நாடுகளின் எல்லைக் கோடுகள்
சுரண்டல் சாட்டையை
சொடுக்கி அடித்து
ஜனநாயகம் என
உரக்கக் கத்துகிறது
தசை குதறும் வெறி
ஆயுதத் தேடலில் அதிகாரத்தை
நிலைநிறுத்தும் ஏகாதிபத்தியம்
நாவை சுழற்றி உதடுகளை நக்கி
உற்று உற்றுப் பார்க்கிறது
அடுத்த வேட்டைக்காய்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...