Singala army's atrocity

(இலங்கையில் 22.10.2007 அன்று போரில் மாண்ட போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி, அப்பகுதி மக்களை பார்வையிடச் செய்திருக்கும் சிங்கள அரசின் கொடூரம்)


ஆனாலும் கொடூரமானது
நிர்வாணத்தைச் சுமத்தும்
பயங்கரத்தின் கைகள்

போர்நியதிகளை சுட்டு வீழ்த்தி
மாண்ட உடல்களை
அவமதித்து மகிழும்
அரசவாதம் இழிவானது

ஆதிக்க இருள் மறைத்த
கண்களில் தவறிய
ஒளியின் முட்டைகள்
பொருளற்று கிடக்கின்றன

போர் தந்திரம்
வெற்றி தோல்வி
இனம் மொழி எல்லை
எல்லாவற்றையும் கடந்து

வலியின் தடைகளை
தூக்கியெறிந்து
விடுதலையின் கைகளைப் பற்றி
நடக்க வேண்டும் மனிதம்

-யாழன் ஆதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.