Hand Rikchaw in West Bengal

இழிவின் போர்வைக்குள்
பதுங்குகிறது இதயம்
வெட்கம் பிடுங்கித் தின்னும்
அவலம் சாலைகளில் சுழல்கிறது
சக்கரங்களென

நாகரீகம் தெளிந்த மனங்களில்
மிதக்கின்றன அழுக்குகள்
புலப்படாத திசைகளிலிருந்து
பெருகுகிறது காரிருள்
புடைத்த கால் நரம்புகளில்
ஊடுறுவிய வெப்பம்
விசையாய் கசிகிறது கைகளில்

பாரத்தின் அழுத்தத்தில்
விழிபிதுங்கி தொடர்கிறது
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்

வர்க்கங்களை வேரறுக்கும்
உரைவீச்சுகளில்
மறந்துதான் போயிருக்கும்
உட்காரும் வர்க்கமும்
இழுக்கும் வர்க்கமும்


Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.