• 2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)
• இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.
• இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!
• ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. (வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் - Global Financial Integrity - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)
• இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.
• நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான். (தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science
• பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி! (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)
• அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.
(இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)
• இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி. (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)
• தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.
இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!
பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?
(மார்ச் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து)
தகவல்கள், data and information பற்றி சரி. ஆனால் அவற்றை கொண்டு அவர் சொல்லும் முடிவுகள் அல்லது கருத்துக்கள் மீது பல நேரங்களில் மாற்று கருத்து உண்டு. Interpretation of data and his sweeping comments and conlusions about the much maligned ‘neo liberal’ polices since 1991.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 5,00,000 கோடிகள், பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என்பது sweeping and inaccurate comment. பட்ஜெட்டில் அதற்கான சுட்டி இது :
indiabudget.nic.in/.../...
மிகவும் பின் தங்கிய, வறண்ட பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்க நிறுவனங்களுக்கு ‘ஊக்கம்’ அளிக்க, வரி சலுகளை பல ஆண்டுகளாகவே உள்ளன. உதாரணமாக புதிய மாநிலமான உத்ராஞ்சலில், தொழில் துவங்கினால், பத்து ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் இதர வரிகளில் கணிசமான அளவு சலுகை. இவை அந்த பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழில்களை துவங்க ஒரு ஊக்கி என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். உண்மையாக சொன்னால், ‘தூய’ சந்தை பொருளாதார கொள்கைகள் படி, இது போன்ற ‘சலுகைகளை’ அரசு அளிக்க கூடாது. பாரபட்ச்சம் இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே வரி விகுதங்கள் தான் இருக்க வேண்டும்.
மேலும் டீசல், சமையல் எண்ணைகள், உரம் மற்றும் இதர விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான வரி சலுகைகள், பெரும் அளவில் இதில் அடங்கும்.
மென்பொருள் ஏறுமதிகளை ஊக்குவிக்க STPIகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தான் இதில் பெரிதாக சொல்லாம். அதுவும் கூடிய விரைவில் நீக்கப்படும். 1991இல் மிக அபாயகரமான அன்னிய செலவாணி பற்றாகுறை ஏற்பட்ட போது, ஏற்றுமதியாளர்கள ை அனைவருக்கும் 100 சதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. To encourage exports which earn foreign exchange for India. பிறகு படிப்படியாக அந்த சலுகை விலக்கப்பட்டது. அதே போல் தான் இந்த ‘சலுகைகளும்’.
அவரின் லாஜிக் படி பார்த்தால், 1970களில் உச்சபட்ச வருமான வரி சுமார் 98%, சுங்க வரி சுமார் 200 சதம், உற்பத்தி வரி சுமார் 50 சதம் அளவில் இருந்தன. இன்று வருமான வரி 34 சதம் தான் உச்சபட்ச அளவு. சுங்க வரி 20 சதம் அளவுதான். உற்பத்தி வரி 15 சதம் தான் சராசரி. இந்த அளவிற்க்கு குறைக்காமல் இருந்திருந்தால் , சாய்நாத் அவர்களின் லாஜிக் படி இன்று பல கோடி கோடிகள் நிகர வரி வசூல் குவிந்திருக்க வேண்டும். ஆனால் வரிகளை மிக குறைத்தால் தான், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து, இன்று பல லச்சம் கோடிகள் வரி வசூல் உயர்ந்தது. அன்றைய விகிதங்கள் தொடர்ந்திருந்தா ல், அன்று கிடைத்த நிகர் அளவுதான் இன்றும் கிடைத்திருக்கும ். Reduction and rationalization of tax rates encourage entrerprise, investment and kindle the intiative for expansion and growth. That is the lesson from history.
அவருக்கு அடிப்படை பொருளாதரம் தெரியவில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கிற து. சுதந்திர இந்திய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு வரி வசூல் மழை. 25 வருடங்களுக்கு முன் இதை கனவு கூட கண்டிருக்க முடியாது. இந்த அபரிமிதமான வரி வசூலை, உருப்படியாக, நேர்மையாக செலவு செய்ய வேண்டியது அரசின் தார்மீக கடமை. அதை அப்படி செய்ய கூடாது என்று தாரளமயமாக்கலை முன்மொழிந்தவர்க ள் சொல்லவில்லையே ! பெரும் அளவில் அரசின் செலவுகளில் ஊழல் மலிந்து, உரியவர்களுக்கு செல்லாமல், நடுவில் திருடப்படுவது அனைவரும் அறிந்த open secret. இதற்க்கு அம்பானிகளை, பெரும் தொழில் முனைவோரிகளை கோபிப்பது சரியல்ல.
மேலும்…
தான்ய உற்பத்தி கூடி உள்ளது உண்மைதான். ஆனால் அது அதிகரித்த வேகத்தை விட ஜனத்தொகை அதிகரித்து வருவதால் தான், இந்த குறைந்த விகிதம் per capita availability of grains and pulses. விவசாயத்தில் சென்ற 20 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் குறைவு என்பது உண்மைதான். அதற்கு முக்கிய காரணம், தாரளமயமாக்கல் கொள்கை விவசாயத்தில் இன்றும் அனுமதிக்கப்படவி ல்லை. நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. 2000 ஏக்கர்கள் போன்ற பெரும் கார்பரேட் (அல்லது கம்யூனிச நாடுகளில் இருந்தது போன்ற கூட்டு பண்னைகள்) இன்றும் உருவாக வழியில்லை. அப்போதுதான் economies of scale and modern farming technology backed by huge private investments சாத்தியம். பார்க்கவும் :
nellikkani.blogspot.com/.../.. .
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்
பொது விநியோகத்தை பரவலாக்குவதை பற்றிதான் இந்த கட்டுரை. அதற்க்கு முழு ஆதரவு இல்லாதற்க்கு உண்மையான காரணம் ஊழல் மற்றும் cynical attitude of officials, politicians and PDS staff.
www.rediff.com/.../12pds.htm
Corruption rendering PDS ineffective
வெட்டியாக ராணுவத்திற்க்கு ம், காமன்வெல்த் விளையாட்டுகளுக் கும், தேவையில்லாத பல அரசு அலுவலகங்களுக்கு ம் செலவிடப்படும் பல லச்சம் கோடிகளை இதற்கு செலவு செய்வது ஒன்றுதான் வழி.
மேலும் சில தகவல்கள் :
திரு.சாய்நாத் ஒரு ‘பார்பனர்’ தான். (வி.வி.கிரியின் பேரன்).
அவர் வேலை rural desk editor ஆக் வேலை பார்க்கும் இந்து பத்திர்க்கை உரிமையாளர்களும் ’பார்பனர்கள்’ தான்.
ஆனால் ‘திராவட தமிழர்கள்’ நடத்தும் வேறு எந்த பத்திரிக்கை / ஊடகங்கள் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதில்லை . வெளியிட தடை எதுவம் ’பார்பன சதி’ மூலம் இல்லை. அதை பற்றி எல்லாம் பேசமாட்டீர்கள். ஆனால் ’பார்பன’ என்ற தலைப்பை மட்டும் இப்படி கீழ்தரமாக உபயோக்கிப்பது இரட்டை வேடம்.
தி.தாமரைக்கண்ணன்
தலைமைச்செயற்குழு உறுப்பினர்
பெரியார் திராவிடர்கழகம்
[email protected]
Content of the article and your additions are very good and timely reminder but the only problem is the way your comments are inserted which misleads the readers. Because, we all know that Brahminism occupies every sides of the political spectrum so as to perpetuate their superiority, and Indian nationalism and also to control the political discourse at all costs. When I read the title and your sentence at the end, I was confused since I was opinion that Sainath too belongs this Brahminical charade of filling in the vacuum in the English-literat e polity for the oppressed sections. I had to do a little search to make sure that Sainath in fact did not utter those words and thus still remains to be part of the brahminical problems scourging us (despite his excellent work).
RSS feed for comments to this post