தேவையான பொருட்கள்:

ரவை - 1 டம்பளர்
சர்க்கரை - 2 டம்பளர்
ஏலக்காய் - 5
நெய் - அரை டம்பளர்
முந்திரிப் பருப்பு - 10
கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி
பன்னீர் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளற வேண்டும். ரவை நன்றாக வெந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளற வேண்டும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்ற வேண்டும், பன்னீரையும் சேர்க்க வேண்டும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வர வேண்டும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச் சேர்த்துக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விட வேண்டும்.

 

 

Pin It