தேவையான பொருட்கள்

அயிரை மீன் - 250 கிராம்
வெங்காயம் ‍ 250 கிராம்
தக்காளி - 2
பூண்டு- 4 பல்
மிளகாய் -2
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்
எண்ணை ‍ 3 க‌ர‌ண்டி
கடுகு,உ.பருப்பு - அரைக்கரண்டி
வெந்தயம் - கால் க‌ர‌ண்டி
மிளகாய்த்தூள்‍ 1 தேக்க‌ர‌ண்டி
மீன்மசாலா தூள் ‍ 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் ‍ 3 தேக்கரண்டி
 
செய்முறை

முதலில் பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும். அது துடிப்பு அடங்கியதும் நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி, உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போட வேண்டும், 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்க்க‌ வேண்டும். மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

(நன்றி: அறுசுவை.காம்)
 

Comments

1 comment

1
karuna
anpulla nanpaa, thayavu seithu ayirai meenukku english enna peyar entru sollamudiyuma? nantri

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.