தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி
கேரட் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை - 6 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

இறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கேரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.

ஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.