தேவையான பொருட்கள்: செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.
ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க
மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதியும் சாதி ஆணவக் கொலைகளும்
- ‘நீட்’ நுழைவும் - தமிழ்நாட்டு மாணவர் வெளியேற்றமும்
- காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையும், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானமும்
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பாயத்தில் முழங்கிய சிங்களர்! - 3
- சாதி எனும் சதியில் சிக்கிய திருநங்கைகள்
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன்
- மறுஜென்மன்
- நத்தை மனிதர்கள்!
- சூழ்ச்சி வெளிப்பட்டது
- பொய்த்திரை விரிக்கும் மெய்வலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்