தேவையான பொருட்கள்:

தக்காளி: 250 கிராம்
எண்ணெய்: 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை: ஒரு கொத்து
பூண்டு: 4 துண்டு
மிளகு: அரை தேக்கரண்டி
சீரகம்: அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்: 3
கடுகு: அரைத் தேக்கரண்டி
கொத்துமல்லி இலை: அரை கட்டு
ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி 

செய்முறை:

தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை பச்சையாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டிவிடவும். பின்பு பாத்திரத்தை மூடி, அளவோடு கொதிக்க வைக்கவும்.

Pin It