இயக்குனர் பாலச்சந்தர் மறைந்து விட்டார் என்று திரையுலகமும் ஊடகங்களும் வடிக்கும் கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தமிழகத்தையே சோகக் கடலில் மூழ்கடிக்க முனைகிறது. பாலச்சந்தர் படைப்பாற்றல் மிக்கவர். செக்கு மாடுகளைப் போல பெரும் கதாநாயகர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்த தமிழ் திரையுலகின் போக்கை மாற்றி அமைத்தவர், திறமைசாலி என்பதெல்லாம் உண்மைதான்; மறுக்கவில்லை.

balachandarஒரு கலைஞன் இந்த திறமைகள் மூலம் அவன் சொந்த வாழ்வில் வெற்றி பெறலாம், வணிக ரீதியில் வெற்றி பெறலாம், அவனது குடும்பத்தார், உறவினர்கள் ,நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பலரை வாழ வைக்கலாம். இந்த திறமைகளுக்காக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவன் ஆகி விட முடியாது. தனது படைப்பாற்றலை, திறமையை பரந்து பட்ட மக்களின் நன்மைக்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆகிறார்கள். அப்படி பார்க்கும்போது நம்மால் பாலச்சந்தரை போற்ற முடியவில்லை. தூற்றுவதும் நமது நோக்கமில்லை. உண்மைகளை நினைவு படுத்துவதே பதிவின் நோக்கம்.

பாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அறுபதுகள் தமிழக அரசியல் வரலாற்றில் கொந்தளிப்பான கால கட்டம். தந்தை பெரியார் அவர்களின் அரும் பெரும் போராட்டங்களால் கிடைத்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரளவுக்கேனும் கை தூக்கி விடும் இட ஒதுக்கீடு காரணமாக அரசுத் துறைகளில் தங்களின் ஆதிக்கம் பறி போவதைக் கண்டு பார்ப்பனர்கள் உள்ளூர கருவிக்கொண்டிருந்த காலம் அது. அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இட ஒதுக்கீடு காரணமாக தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கள்ளப்பரப்புரைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கள்ளப்பரப்புரையின் திரையுலகப் பிரதிநிதிகளில் ஒருவர்தான் பாலச்சந்தர்.

அரங்கேற்றம் என்ற இவரது படத்தில் ஒரு பார்ப்பன பெண் குடும்ப வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதாக காட்டியிருப்பார். கலைகளும், இலக்கியங்களும் அவை படைக்கப்படும் காலத்தை காட்டும் கண்ணாடிகள் என்பார்கள். அந்த அடிப்படையில் ஒரு பார்ப்பனப் பெண் வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதென்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று புரட்டு. மெய்யுலகில் வறுமையால் விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படுபவர்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அக்கிரகாரத்தில் சொந்த வீடு, கூடுதலோ குறைவோ ஏதோ ஒரு வருமானம் தரும் கோயில் குருக்களாக இருக்கும் தந்தை இப்படி அமைந்த சூழலில் அந்தப் பெண் விபச்சாரத்துக்குப் போவதாக சொல்லியிருப்பார். அந்த படத்தில் கோயில் குருக்களின் குடும்பம் பசியும் பட்டினியுமாக காலம் தள்ளுவதாகவும் கதை அளந்திருப்பார்.

நண்பர்களே, எண்ணிப்பாருங்கள். உங்கள் வாழ் நாளில் உடல் உழைப்பில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றும் ஒரு பார்ப்பனரையாவது நீங்கள் பார்த்ததுண்டா? இருக்காது. பாலச்சந்தர் சொல்வது போல் பார்ப்பன குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு வறுமையால் வாடுவது உண்டென்றால் மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஒரு பார்ப்பனர் கூட அந்த சமூகத்திலிருந்து உருவாகவில்லையே, ஏன்?

இவரது இன்னொரு படம் ''வானமே எல்லை''யில் ''உயர் சாதி''யில் பிறந்த ஒரே காரணத்தால் வேலை கிடைக்காத, படித்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகவும் காட்டி இருப்பார். ஆனால் உண்மை நிலை என்ன? இந்த படங்கள் வெளிவந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு அரசுத் துறைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் என்பதை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு அவர், ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்:

“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணைச் செயலாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் 'கூர்ந்த அறிவுத் திறன்' தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை”

இன்றைய கால கட்டத்தில் கூட சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று பார்ப்பன பனியா கும்பலின் அரசுகள் அடம் பிடிக்கின்றனவே! அவர்கள் ஆதிக்கம் அம்பலமாகி விடக்கூடாது என்ற கள்ள நோக்கம்தானே காரணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை சாகடித்தவர்கள், இன்றும் தங்கள் ஆதிக்கத்தை காங்கிரசு கட்சியாக, சங் பரிவாராக, கிரிக்கெட்டாக, திரைப்படமாக, சமஸ்கிருதமாக, வாஸ்துவாக, சோதிடமாக தக்க வைத்திருப்பவர்கள் சார்பாக பாலச்சந்தர் நம்மைப் பார்த்து 'வானமே எல்லை'யில் சொல்கிறார்: ''வேலை குடுக்காம எங்களை சவாடிக்கிறீங்க'' என்று. இப்படியான கள்ளப்பரப்புரைகள் சமூகத்தில் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் பிற்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒரு சிலர் விபீடணர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவதை பார்க்கிறோம்.

விபீடணர்கள் இருக்கும் வரை ராமன்களுக்கு கொண்டாட்டம்தான்.

Comments

34 comments

34
Chandrasekaran Subramaniam
எவ்வளவு வறுமையில் இருப்பினும் எந்த ஒரு உயர்வகுப்புக் குடியாவது செருப்பு தைக்கவோ, மூட்டை தூக்கவோ, கழிவறை சுத்தம் செய்யவோ, துணி வெளுக்கவோ போகாது. அவர்களுக்கு அந்த தொழில்செய்பவர்கள் நீசர்கள், தீண்டத்தகாதவர்கள். அவர்களை நம்பித்தானே இப்போது இருக்கும் மத்திய மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும், கோவில் கருவறையில் கூட இந்த 2015ஆம்
ஆண்டில் கூட நுழைய முடியாதபடி சாதிக் கோட்டையை கட்டிக் கொண்டு உள்ளார்கள். எப்போது அமாவாசை, பௌர்ணமி, பிரதோசம்,
நவக்கிரகம் என கடவுள் பேரைச் சொல்லி செய்யும் கயமைத்தனம் ஒழியுமோ, சமஸ்கிருதம் பேசுவோரை நம்பி செல்லும் சமுதாயம் திருந்துமோ? கடவுளை நம்புங்கள், அவன் பெயரில் நடத்தும் அக்கிரமங்களை சாதிப் பாகுபாடுகளை, சமூகத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஏளனம் செய்யும் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்.
v.z.shukoor
இயக்குநர் இமயத்தின் திரையுலகப்
புரட்சி:
=======================================
தனது மகள் விரும்பும் நபரின்
மகனை விரும்பும் தாய்
# அபூர்வராகங்கள்
தனது மகள் உறவு கொண்ட நபரை
உறவு கொள்ளும் தாய்...
# அவள்ஒருதொடர்கதை
கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு
கொள்ளும் நபர்...
# மன்மதலீலை
காதலியை மனைவியாக்கி
கள்ளக்காதலியை
துணைவியாக்கி...
# அச்சமில்லைஅச்சமில்லை
காதல் மனைவியை கைவிட்டு
வேறொருத்தியை
மனைவியாக்கி...
# இருகோடுகள்
மனைவியை பிரிந்து
வேறொருத்தியை காதலித்து
மீண்டும் மனைவி...
# புதுப்புதுஅர்த்தங்கள்
மனைவி காதலி சாராயம் சங்கீதம்
இத்யாதி...
# சிந்துபைரவி
தனது தங்கை விரும்பும் நபரை
அக்காக்கள் விரும்புவது, தங்கை
வேறொருவனோடு பாலியல்
லீலையில் ஈடுபடுவது
# சொல்லத்தான்நினைக்கிறேன்
தனது மனைவியை ஒதுக்கி தான்
விரும்பும் பெண்ணிடம் பிள்ளை
பெறுவது....
# கல்கி
தன் மகன் காதலை தடுக்க மகனின்
காதலியின் தாயை திருமணம்
செய்து, மகனுக்கு அவன்
காதலியை தங்கை
ஆக்குவது..பாலியல் லீலைகளில்
ஈடுபடுவது...
# வானமேஎல்லை
தமிழரை இன வெறியனாகவும்
சிங்களரை உயர்வாகவும்
காட்டுவது...
# புன்னகைமன்னன்
பருவக்கிளர்ச்சியால் பாலியல்
உறவில் ஈடுபட்டு ஏமாளியை சிக்க
வைப்பது...
# நூற்றுக்குநூறு
தம்பி தங்கை குடும்பம் பாலியல்
தொழில்...
# அரங்கேற்றம்
நண்பனின் காதலியை அடைய
நினைப்பதும் அந்தப் பெண்ணே
தனது சித்தியாக மாறுவதும்...
# மூன்றுமுடிச்சு
ஒரே பெண் காதலன்,கணவன்,
காதலிப்பவன்... முக்கோணக் காதல்
# அவர்கள்
பிரிந்த மனைவியை மற்றொரு
நபருடன் சேர்க்க நினைப்பது...
# மனதில்உறுதிவேண்டும்
ஒரே ஆளை பல்வேறு பெண்கள்
வயது/தகுதி பார்க்காமல்
மோகிப்பது
# அழகன்
இயக்குநர் இமயம் உண்மைலேயே
பெரிய தில்லாலங்கடி தான்.
ப்ரனா
திரு.பாலச்சந்தர் இயக்கிய "101" திரைப்படங்களில் இரண்டே திரைப்படங்களை சுட்டிக் காட்டிவிட்டு, அவரை பார்ப்பனிய பிரதிநியாய் சித்தரித்திருப்பது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வை காட்டுகிறது. இது போன்ற நகைச்சுவை கட்டுரைகளை "திரு. திப்பு" அவர்கள் நிறைய படைக்க என் வாழ்த்துக்கள். - ப்ரணா
கதிரவன்
திப்பு அவர்களே, ப்ரனா சொல்வது சரிதான். தாங்கள் ஒரு பானைச்சோற்றுக்கு இரு சோறுபதமென எடுத்துக்காட்டியிருப்பது தவறுதான். தாங்கள் சற்று முயன்றால் எப்படியும் அரைப்பானையாவது தேறும். இக்கட்டுரையை விரிவுசெய்து நூலாக்குக.
CommonMan
திரு.பாலசந்தர் அவர்கள் தீண்டாமையை மிக அழகாக உன்னால் முடியும் தம்பியில் காட்டியிருப்பார். இவரை திரை பட இயக்குனராக பாருங்கள். எதற்கெடுத்தாலும் பார்பனியத்தை எடுக்காதீர்கள். ஷங்கர் கூட தான் ஜென்டில்மன் படத்தில் ஏழை பார்பனன் மருத்துவம் படிக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்வான். பார்பனர்களில் வறுமையில் வாடுபவர்கள் இல்லையா?
t.sengadir
kunam naadi kutramum naadi mikai naadi mikka kolal
திப்பு
ப்ரணா;
இரண்டு படங்களா,இருபது படங்களா என்பது இருக்கட்டும்.குற்றச்சாட்டுக்கு ஒரு விடையும் சொல்ல முடியவில்லையா உங்களால்.இந்த இரு படங்களை காட்டி எழுதியதற்கே பச்சை மிளகாயை கடித்தது போல் பதறுகிறீர்கள்.இன்னும் இரண்டு குற்றச்சாட்டுக்களை வைக்கிறேன்,என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.

பாலச்சந்தரை பெண்ணுரிமை போராளியாக சித்தரிக்கிறார்கள். கதாநாயகிகளுக்கு முதன்மைத்துவம் கொடுத்து பல படங்கள் எடுத்திருக்கிறாராம்.அவரது நிழல் நிஜமாகிறது படத்தின் கம்பன் ஏமாந்தான் பாடலில்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
என்று பெண்களை அடுப்படியில் பூட்டி வைக்க சொன்னவரைத்தான் பெண்ணுரிமை போராளியாக கொண்டாடுகிறீர்கள்.

அடுத்து அவரது வக்கிரம்.நூல் வேலி திரைப்படத்தில் கதாநாயகன் வளர்ப்பு மகளோடு தகாத உறவு கொண்டு விடுவான்.இதுவே அருவருப்பூட்டும் வக்கிரம் என்றால் இதை விட வக்கிரம் அடுத்து வரும்.அந்த உறவு நடைபெற்று கொண்டிருக்கும்போது வெளியில் சென்று விட்டு திரும்பி வரும்அவன் மனைவியும் அவர்களின் ஐந்து அல்லது ஆறு வயது மகளும் கதவை வெளிப்புறமிருந்து திறவுகோலால் திறந்து உள்ளே நுழைவார்கள்.உள்ளே காணும் காட்சியால் ஒரு கணம் அதிர்ச்சியால் உறைந்து போவார்கள்.பிறகு சின்னஞ்சிறு மகள் அந்த காட்சியை தொடர்ந்து பார்க்காமல் தடுக்க அந்த தாய் மகளை இழுத்து திருப்பி அணைத்துக்கொள்வாள். ஒரு பச்சிளம் குழந்தை அந்த கண்றாவியை காண்பது போல் காட்சி அமைக்க எவ்வளவு வக்கிரம் நிரம்பிய மூளை வேண்டும்.
திப்பு
எதற்கெடுத்தாலும் பார்பனியத்தை எடுக்காதீர்கள்.என்று எங்களுக்கு அறிவுரை கூறும் அல்லது உத்தரவு போடும் CommonMan அவர்களே,முதலில் சந்து கிடைக்கும் இடமெல்லாம் பார்ப்பனியத்தை புகுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு அல்லது உங்களவாக்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்.அவர்கள் புகுத்துவதால்தான் விமர்சிக்க வேண்டிய அவசியமே எழுகிறது.

பார்பனர்களில் வறுமையில் வாடுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.இருக்கலாம்.ஆனால் அது மிக மிக குறைந்த விழுக்காட்டினராகவே இருப்பார்கள்.பார்ப்பன பனியா சமூகம்தான் அரசு ,வணிகம்.பொருளாதாரம் என்று அத்தனை துறைகளையும் பெருவாரியாக ஆக்கிரமித்துள்ளது.அதனால்தான் சாதி வாரி மக்கள் தொகை கூடாது என தடை போடுகிறது அவர்களால் இயக்கப்படும் அரசு.

பார்பனர்களில் கணிசமானோர் வறுமையில் வாடுவது உண்மையென்றால்

ஏர் உழும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
குப்பை,மலம் அள்ளும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
மீன்பாடி வண்டி ஒட்டி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
சரக்குந்துகளில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
நடைபாதையில் கடை போட்டு பிழைக்கும் பார்ப்பனர்ஒருவர் கூட இல்லையே ஏன்?
தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பழைய பேப்பர் காலி புட்டி வாங்க ஒரு பார்ப்பன வியாபாரி இல்லையே ஏன்.
கொத்தனார்,பெரியாள் சித்தாள் வேலை செய்து பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
தமிழ்நாடு போக்குவரத்து துறை தொழிலாளர்களில் பார்ப்பனர்கள எத்தனை பேர் சொல்ல முடியுமா.
இப்படி சந்திக்க முடியாத பார்ப்பனர்களை எப்படி சந்திக்கலாம் என்று பார்த்தால்
கோயில்கள்,அரசு,தனியார் வங்கிகள்,அரசு,தனியார் அலுவலகங்கள் வக்கீல்கள்,மருத்துவர்கள்,தணிக்கையாளர்கள்,ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் சோதிடர்கள்,இன்னும் பல உடல் வருத்தி உழைக்காமல் செய்யும் வேலைகள்.இவற்றில் பார்க்கலாம்.

இது எதார்த்த நிலைமையா இல்லையா.இதைத்தான் அய்யா தந்தை பெரியார் கல்லில் செதுக்கினாற் போல் சொல்லியிருக்கிறார்.

\\, பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள்
மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல்
வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம்
முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத
முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே
அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப்
பாதுகாத்து வைக்கிறார்கள்.//
ப்ரணா
திரு. திப்பு அவர்களுக்கு,
ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்தின் கண்ணாடி. எதிரில் அசிங்கம் இருந்தால் அதை தான் கண்ணாடி காட்டும்; நூல் வேலி ஒரு நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்ப்டம். பாலசந்தரின் கற்பனை கிடையாது......அப்படி பார்த்தால், வில்லன் கதாபாத்திரம் படைக்கும் அனைத்து படைப்பாளிகளுமே வக்கிரமானவர்கள் என்ற பொருளில் நீங்கள் வாதிடுகிறீர்கள்.. ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்...

"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே...." அந்த கதாபாத்திரத்தின் கருத்து...

இதே பாலசந்தரின் "மனதில் உறுதி வேண்டும்" படத்தில் வரும் பாட்டு:

"சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்.
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும
பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்" - இந்த பாடலும் கே.பி படத்தில் இடம் பெற்ற பாடலே1

உங்களை போன்று, சாதனையாளர்களை குறை கூறி அடுத்தவரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப நினைக்கும் சாரார் நிறைய இருக்கிறார்கள்; அவர்களின் பொது குணம், ஒரு தலை பட்சமாக, முழு விவரம் அறியாத, உண்மைக்குப் புறம்பான கருத்தை பரப்புவது. அதில் நீங்களும் விதி விலக்கல்ல.

வாழ்த்துக்கள்! - ப்ரணா
t.yalthevan
ok balachandar oppose resevation now thalith party also against for taking b c community statitics, they ar bramin ?
திப்பு
ப்ரணா அவர்களுக்கு,

நூல் வேலி உண்மை நிகழ்வு என்கிறீர்கள். ஐந்து வயது மகள் ''அதை'' பார்த்ததும் உண்மை நிகழ்வா.

அதெப்படி ஒரு பாடல் கதாபாத்திரத்தின் கருத்து என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள்.இன்னொரு பாடலுக்கான பெருமையை பாலச்சந்தருக்கு அளிக்கிறீர்கள்.அய்யா,இரண்டு கதாபாத்திரங்களுமே இயக்குநரின் படைப்புகள்தானே.

\\அவர்களின் பொது குணம், ஒரு தலை பட்சமாக, முழு விவரம் அறியாத, உண்மைக்குப் புறம்பான கருத்தை பரப்புவது. அதில் நீங்களும் விதி விலக்கல்ல. //

ஆம்,ஒரு பக்க சார்பானதுதான் என் வாதம்.பாலச்சந்தர் பார்ப்பன உயர்சாதியினருக்காக பேசுகிறார்.நான் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுகிறேன்.அவர் அநீதியின் பக்கம்.நான் நியாயத்தின் பக்கம்.

முழு விவரம் இல்லை என்கிறீர்கள்.இருக்கட்டுமே .கொஞ்சம் தெரிந்த விவரங்களை சொல்லும்போதே பாலச்சந்தரின் பார்ப்பனியம் பல்லிளிக்கிறதே.

அப்புறம்,உண்மைக்கு புறம்பாக நான் எதை சொல்லிவிட்டேன் என்று குறிப்பாக சொன்னால் திருத்தி கொள்கிறேன்.
திப்பு
யாழ்தேவன்
எந்த தலித் அமைப்பு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என சொல்கிறது என்பதை குறிப்பாக சொன்னால் மேற்கொண்டு விவாதிக்க அணியமாக இருக்கிறேன்.
ப்ரணா
“எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை எடுக்காதீர்கள்....” என்ற common man னுக்கு திப்பு சொன்ன பதிலில் அவரின் அறியாமையின் விஸ்பவரூபத்தை தரிசிக்க முடிந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை உள்ளது.
மீனைப் பார்த்து, “எப்பொழுதும் தண்ணீரிலே சுகமாக இருக்கிறது; கரைக்கு வர பயப்படுகிறது; மீன் ஒரு கோழை” என்று சொன்னால் அது எவ்வளவு அறிவீனம்; தண்ணிரில் உள்ள இன்பமும் துன்பமும் மீனுக்குத் தான் தெரியும்....
• ஒரு கற்பழிப்பு குற்றத்திலும் பார்ப்பான் இருப்பதில்லை (99%)
• வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதில்லை
• மீட்டர் வட்டிக்கு கடன் கொடுத்து அடுத்தவன் வாழ்க்கையை கெடுப்பதில்லை
• மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களில் ஈடுபடுவதில்லை (99%)
• டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை
• சந்தேக கேஸில் சிறை செல்வதில்லை
• தலைவன் கண் அசைக்க காத்திருந்து காலித் தனத்தில் ஈடுபடுவதில்லை
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரியார் – ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களின் மனதில் வெறுப்பையும் துவேஷ உணர்வயும் தூண்டியவர். சோ ராமசாமி சொன்னது போல் “Periyar started his career as an educationist and ended up as an entertainer”.
-ப்ரணா
திப்பு
ப்ரணா பார்ப்பனர்களின் நல்லியல்புகள் என ஒரு பட்டியல் கொடுத்துள்ளார்.கொலை,கொள்ளை,அநியாய வட்டி,பாலியல் வன்முறை,குடி,ஐயத்தின் பேரில் சிறை ,காலிகளின் வன்முறை ஆகியனவே அவை.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஆத்திரத்தில் ஒரு கணம் அறிவிழந்து கொலை முதலான குற்றங்களை செய்யும் நபர்கள் ஒரு ரகம். தனிப்பட்ட முறையிலோ,குழு என்ற முறையிலோ சொந்த நலன்களுக்காக திட்டமிட்டு அந்த குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் [organised crime ] இரண்டாவது ரகம்.பார்ப்பனர்கள் இரண்டாவது ரகம்.

ராமனை ஏவி விட்டு சம்புகனை கொலை செய்தது துவங்கி பாண்டிய மன்னனை கைக்குள் போட்டுக்கொண்டு எண்ணாயிரம் மதுரைச் சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றது,19912-93 மும்பை,2002 குசராத் என வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்களின் கொலைக்குற்றங்கள் எண்ணி மாளாதவை.

கொள்ளையை பொறுத்தவரை ப்ரணாவுக்கு கட்டம் போட்ட கைலியும் குறுக்கு கோடு போட்ட சட்டையும் கன்னத்தில் மருவும் இருக்கோணும் போல.மேசைக்கு கீழே கை நீட்டி லஞ்சம் வாங்கும் பார்ப்பனர்களை எந்த கணக்கில் சேர்ப்பது.

ஊரறிந்த பொம்பளை பொறுக்கி சங்கராச்சாரி ஜெயேந்திரனை லோக குருவாக கொண்டாடும் பார்ப்பனர்கள இன்னும் தனியாக பாலியல் வன்முறையில் வேறு ஈடுபடனுமா.

பார்ப்பனர்கள் விதிவிலக்கின்றி வங்கிகளில் வைப்புநிதி ,காப்பீடு போன்ற வசதிகளின்றி வாழ்வதில்லை.அவற்றுக்கான வட்டி எங்கிருந்து வருகிறது.அந்நிறுவனங்கள் கடனை கட்ட முடியாத பலரது சொத்துக்களை பறித்து ஏலத்தில் விடுவதை காண்கிறோம்.இப்படி ஊர்தாலி அறுத்து கிடைக்கும் வட்டியை அனுபவித்துக்கொண்டே பார்ப்பனர்கள் மீட்டர் வட்டிக்கு விடுவதில்லை என்பதில் என்ன பெருமை இருக்கிறது.

குடி.சோமபானம்,சுரா பானம் எல்லாம் மறந்து விட்டதா இவருக்கு.இன்றைய பார்ப்பனர்களில் குடிகாரர்களே இல்லையா.

சாவுத்தண்டனை,வாழ்நாள் தண்டனை பார்ப்பனர்கள் பெறுவதில்லையாம்.இந்த தண்டனைகள் பெறுவதற்குரிய குற்றங்களை தனிநபராக பார்ப்பனர்கள் செய்வதில்லை என்றாலும் சங் பரிவாராக அவர்கள் நடத்தும் கொலைகளுக்கு தண்டனை வாங்கித்தர இன்றைய பார்ப்பன பனியா அரசுகள் முனைப்பு காட்டவில்லை.அவ்வளவுதான்.

காலித்தனமான வன்முறையில் பார்ப்பனர்கள் ஈடுபடுவதில்லை என்றால் சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடி வழிபட முயன்ற ஆறுமுக சாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பார்ப்பனர்களை ப்ராணா சமூகப்பிரஷ்டம் செய்து விட்டாரா.அண்மையில் கூட ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது பேருந்துகளையும் பொது சொத்துக்களையும் மக்களையும் தாக்கி அ .தி.மு.க.காலிகள் வன்முறை வெறியாட்டம் போட்ட போது அதனை அ .தி.மு.க வினர் போராட்டம் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதினவே அதை விட கேவலமான கண்ணசைவுக்கு காத்திருக்கும் காலித்தனம் உண்டா.

\\பெரியார் – ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து //

இந்த விவாதத்தில் பெரியார் மேற்கோள் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளேன்.பார்ப்பனர்கள் கலப்பையை தொடுவது அவர்கள் தர்மப்படி பாவம் என்ற அவரது கூற்று பொய்யா என்ன.உண்மைதானே.

மற்றபடி பெரியார் என்ன பொய் சொன்னார் அந்த பொய்யை வைத்து என்ன பொய் பரப்புரை செய்தார் என்று குறிப்பாக சொன்னால் மேற்கொண்டு விவாதிக்கலாம்.
ப்ரணா
திரு. திப்பு அவர்களுக்கு,

ம.வெங்கலேசன் எழுதிய "பெரியாரின் மறுபக்கம்" வாங்கிப் படியுங்கள்.

பெரியாரின் தமிழ் விரோத போக்கு, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண், திருக்குறளை பற்றி முன்னுக்குப் பின் முரணாய் பேசியது,
சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பெரியார் பிரித்தே பார்த்த விதம்,
பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை,
பெரியாரின் ஆங்கில் மோகம்,
மதக் கொள்கையில் பெரியாரின் தடுமாற்றம்,
உண்மைக்கு புறம்பாக வரலாற்றை திரித்து பேசிய விதம்....
இன்னும் நிறைய இருக்கிறது. வாங்கி படியுங்ககள்

ஒரு இனத்திறகு எதிராக கருத்து தீவிரவாதம் செய்தவர் பெரியார். அதை யாரும் மறுப்பதற்கில்லை.

-ப்ரணா
திப்பு
கடைசியில் வெங்கடேசனை சரணடைந்து விட்டீர்கள்.அவர் ஒரு கோடரி காம்பு.தன்னை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக்கொள்ளும் அவர் தானும் தன் சமூக மக்களும் பெரியார் மட்டும் போராடி இருக்காவிட்டால் படித்திருக்கவே முடியாது என்ற உண்மையை உணராமல் தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கும் இழிசெயலை செய்து கொண்டிருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்க காரணமாக இருந்ததும்,அதற்காக இந்தியாவின் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தை கொண்டுவர செய்ததும் பெரியாரின் போராட்டங்களே.அரசியல் சட்டம் அமுலுக்கு வந்து முதல் பத்தாண்டுகளுக்கே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த பத்தாண்டு முடிவதற்குள் அண்ணல் அம்பேத்கர் மறைந்து விட்டார்.ஆனாலும் இட ஒதுக்கீடு இன்று வரை தொடர்வதற்கு காரணம் அய்யா பெரியார்தான் . இந்த உண்மையை இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க வாய்ப்பு கிட்டிய எங்களை போன்றோர் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறோம்.கோடரி காம்போ எதிரிகளின் கள்ளப்பரப்புரைகளை வாந்தி எடுத்து நாறடித்து திரிகிறது.

ம.வெங்கடேசனின் பெரியார் குறித்த அவதூறுகளுக்கு தகுந்த விளக்கம் கிடைக்க நான் கீழ்க்கண்ட நூல்களை பரிந்துரைக்கிறேன்.ப்ராணாவாகிய உங்களுக்கு அல்ல.உங்களை போன்ற பார்ப்பனர்கள் எக்காலத்திலும் திருந்த மாட்டீர்கள் என்று அய்யா சொல்லி எங்களுக்கு தெரியும்.வெங்கடேசனின் கள்ளப்பரப்புரைக்கு பலியாக கூடிய ''சூத்திர பஞ்சம'' சாதியினருக்கு பரிந்துரைக்கிறேன்.

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்

கிடைக்குமிடம்.பெரியார் திடல்.வேப்பேரி.சென்னை.

ம.வெங்கடேசனுக்கு பெரியாரின் மாணவர்கள் தகுந்த மறுப்புக்களை எடுத்து வைக்கும் வாதங்கள் இணையத்திலும் கொட்டிக்கிடக்கின்றன.மாதிரிக்கு ஒரு சில.

http://periyaarr.blogspot.in/2007/09/blog-post_17.html

http://thamizhoviya.blogspot.in/2009/06/blog-post_7295.html

http://tamilnothindu.blogspot.in/2009/07/tamilhindu.html
திப்பு
\\ஒரு இனத்திறகு எதிராக கருத்து தீவிரவாதம் செய்தவர் பெரியார். அதை யாரும் மறுப்பதற்கில்லை.//

உங்கள் ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கினால் அது தீவிரவாதமா.பெரியாரின் அரை நூற்றாண்டு கால பார்ப்பனிய எதிர்ப்பு பரப்புரையின் போது ஒரு பார்ப்பனர் மீது கூட வன்முறை தாக்குதல் நடந்ததில்லை.ஒரு அக்கிரகார வீடு கூட கொளுத்தப்பட்டதில்லை.ஆனாலும் அவரை தீவிரவாதி என்பீர்கள்.ஆயிரக்கணக்கான கொலை,கொள்ளை,தீவைப்பு ஆகியனவற்றை நடத்திய,நடத்தும் RSS சமூக சேவை அமைப்பு என்பீர்கள்.நல்லா இருக்குய்யா உங்க வாதம்.
ப்ரணா
திரு. திப்பு அவர்களுக்கு,

மனிதர்களை மனிதனாய் பார்க்காமல், பெரியாரைப் போல் இவன் பார்ப்பான், இவன் பார்ப்பான் அல்லாதவன், என பிரிவினை வாதம் செய்யும் உங்களை போன்று வெறுப்புணர்ச்சியால் இயங்குவோரின் மன நலம் சீராக, அந்த பெரியார் செருப்பால் அடித்த இறைவனை வேண்டுகிறேன்.

-ப்ரணா
ப்ரணா
எப்படி பெரியார் தன்னைத் தானே தமிழ் மக்களின் காப்பாளராய் எண்ணி இயங்கினாரோ அதே போல், RSS அவர்களாக இந்த சமூகத்தை காப்பவர்களாக எண்ணிக் கொண்டுள்ளனர். RSS-சை சேவை அமைப்பு என்று சொன்னால், பிறந்த குழந்தை கூட நம்பாது. அவர்களின் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிராக நான் எழுதிய கவிதை இது:

**ஹிந்துத்துவா!**
கடப்பாறை
அரிவாள்
திரிசூலம்
இவற்றோடு அலைகிறார்கள்
சாதுக்கள்! -ப்ரணா
திப்பு
திரு. ப்ரணா அவர்களுக்கு,

\\மனிதர்களை மனிதனாய் பார்க்காமல்,//

மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் விலங்கினும் கீழாய் பார்ப்பது பார்ப்பனியமே.நாயும் பன்றியும் தாராளமாக நுழையும் அக்கிரகார தெருவில் தாழ்த்தப்பட்டோர் நுழையக்கூடாது என ஆட்டம் போட்ட பார்ப்பனியத்தை ஆதரித்து பேசும் நீங்கள்,இன்றளவும் ''Brahmins only'' என்று வாடகை வீட்டுக்கு விளம்பரம் கொடுக்கும் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்.என்ன ஒரு பித்தலாட்டம்.

\\பெரியாரைப் போல் இவன் பார்ப்பான், இவன் பார்ப்பான் அல்லாதவன், என பிரிவினை வாதம்//

ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் பிரித்து பேசுவது பிரிவினை வாதம் என்றால் அந்த பிரிவினை வாதத்தை தொடர்ந்து செய்ய உறுதி ஏற்கிறேன்.உண்மையில் பிரிவினை வாதம் பேசுவது நீங்கள்தான்.இந்த விவாதத்தில் உங்கள் பதிவுகளில் பார்ப்பனர்களை தனி இனம் என்றே குறிப்பிடுகிறீர்கள். அதாவது பார்ப்பனர்கள் தமிழர்களோ,தமிழினமோ இல்லை என்ற கமுக்கமான [ரகசியமான] அக்கிரகார உள்ளக்கிடக்கையை தன்னையறியாமல் வெளிப்படுத்துகிறீர்கள்.

\\ உங்களை போன்று வெறுப்புணர்ச்சி யால் இயங்குவோரின் மன நலம் சீராக, அந்த பெரியார் செருப்பால் அடித்த இறைவனை வேண்டுகிறேன்.//

அடேங்கப்பா;கலாய்க்கிறாராம்.யாருக்கு மனநலம் சீராக வேண்டும்.தலையில் பிறந்தவன் நான்,காலில் பிறந்தவன் நீ என இருபிறப்பாளர் பெருமை பேசி அதன் அடையாளமாக பூணூலை உருவி விட்டுக்கொண்டு திரியும் உங்களுக்கா,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவனின் தமிழ் நெறி போற்றும் எங்களுக்கா.

\\RSS-சை சேவை அமைப்பு என்று சொன்னால், பிறந்த குழந்தை கூட நம்பாது.//

நன்றி,முதல் முறையாக இந்த விவாதத்தில் உண்மை பேசி இருக்கிறீர்கள்.அதே குழந்தை பெரியார் கருத்து தீவிரவாதம் செய்தார் என்பதையும் நம்பாது.
ப்ரணா
திரு திப்பு,

நீங்கள் இன்னும் 1900-களில் இருக்கிறீர்கள் போல் இருக்கிறது.... 'அக்கிரகாரம்' என்ற ஒன்றே பல ஊர்களில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் காலம் இது, பெரும்பாலான இளைய தலைமுறையினர் நகரங்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்த வார்த்தையே வழக்கொழிந்து போய்விடும்... உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா:)?

ப்ரணா
திப்பு
திரு.ப்ரனா ,
உங்கள வாதங்களை பார்த்தால் உங்கள் மீது இரக்கப்பட தோன்றுகிறது.இது வரை நான் வைத்த வாதங்கள் எதற்கும் எதிர் வாதம் வைக்க முடியவில்லை உங்களால்.ஆனாலும் கடைசி பின்னூட்டம் போடுவதன் மூலம் ''வெற்றி''அடைந்து விட வேண்டும் என்ற வெறி உங்களிடம் காணப்படுகிறது.

பெரியார் பொய் சொல்லி பரப்புரை செய்தார் என்றீர்கள்.ஆதாரம் கேட்டவுடன் வெங்கடேசனின் முதுகுக்கு பின்னால் ஒளிந்தீர்கள்.பெரியார் கருத்து தீவிரவாதம் செய்தார் என்றீர்கள்.''பெரி யாரின் அரை நூற்றாண்டு கால பார்ப்பனிய எதிர்ப்பு பரப்புரையின் போது ஒரு பார்ப்பனர் மீது கூட வன்முறை தாக்குதல் நடந்ததில்லை.ஒரு அக்கிரகார வீடு கூட கொளுத்தப்பட்டதில்லை.''என்று கொடுத்த விளக்கத்தில் அது பற்றி வேறு எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் இருக்கிறீர்கள்.

இப்போது அக்கிரகாரங்கள் வழக்கொழிந்து வருவதாக பெரிய ''கண்டுபிடிப்பை''நிகழ்த்துகிறீர்கள்.யாருக்குத்தானய்யா இது தெரியாது.அதனால்தான் ''ஆட்டம் போட்ட''என்று இறந்த கால வினைச்சொல்லை பயன்படுத்தி இதனை சொல்லி இருக்கிறேன்.இது கூட உங்கள் அறிவுக்கு எட்டாமல் ''நகைச்சுவை உணர்வு''என்று பேச வந்து விட்டீர்கள்.ஆனால் பார்ப்பனர்கள் புதிய புதிய வடிவங்களில் அக்கிரகாரங்களையும் தீண்டாமையையும் தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள்.அதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் ''Brahmins only'' வீட்டு விளம்பரம்.அது பற்றி வாயை திறந்து எந்த ஒரு முத்தையும் உதிர்க்கவில்லை நீங்கள்.
ப்ரணா
திரு. திப்பு அவர்களே,

நான் பிராமணர்கள் பிரதிநிதி கிடையாது, உங்கள் வாதங்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீண் அடிக்க;

என் வாதம் எல்லாம் இவை தான்,

1,மனிதர்களை மனிதர்களாய்ப் பாருங்கள்;

2,திரு. பாலச்சந்தர் மிகச்சிறந்த படைப்பாளி, அவருக்கு சாதி சாயம் பூசி, உங்கள் மனதில் உள்ள மலத்தை அவர் மீது துப்பாதீர்கள்;

3, பெரியார் சீர்திருத்தவாதி தான், இருந்தாலும், ஒரு இனத்திற்கு எதிராக துவேஷத்தை பரப்பிய, வார்ததை வன்முறை நிகழ்த்திய பயங்கரவாதி என்பது மறுக்க முடியாத உண்மை.

உங்கள் மனதை குளிர்விக்க எனது மற்றுமொரு கவிதை:

கார்ல் மார்க்ஸ்
மறுக்கவும், வெறுக்கவும்
கடவுள் இருந்தார்

பெரியார்
திட்டவும் செருப்பால் அடிக்கவும்
கடவுள் இருந்தார்

இன்னமும் கடவுள்
காத்துக் கொண்டிருக்கிறார்;

பாவம் அவர்கள் தான்
செத்தொழிந்து போயினர்! - ப்ரணா
திப்பு
திரு.ப்ராணா

வர வர உங்களுக்கு கண் மண் தெரியாமல் ஆத்திரம் வருகிறது.மன நலம் குன்றியவன்,நெஞ்சில் மலம் சுமப்பவன் என்றெல்லாம் என்னை திட்டுகிறீர்கள்.நீங்கள் பார்ப்பனர்களின் பிரதிநிதியாக தன்னைத்தானே நியமித்துக்கொண்டுதான் இங்கு விவாதிக்கிறீர்கள்.இல்லையென்றால் என்ன Hair க்கு மெனக்கெட்டு இந்த பதிவுக்கு இவ்வளவு எதிர்ப்பு பின்னூட்டங்கள் போட வேண்டும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.அதனால்தான் எனது வாதங்களுக்கு விடை சொல்லி நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை என்று கூறிக்கொண்டே இரண்டு வார காலமாக நாள்தோறும் இந்த கீற்று பதிவுக்கு என்ன மறுமொழி வந்துள்ளது என பார்த்து அதற்கு விடை எழுதி நேரத்தை செலவழிகிறீர்கள் என்பது உங்களுக்கு புத்தியில் உரைக்கவில்லை.

\\.என் வாதம் எல்லாம் இவை தான்,//

வாதம் என்றால் தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஆதாரங்களையும் செய்திகளையும் எடுத்து வைக்க வேண்டும்.அப்படி எதையும் சொல்ல வக்கில்லாத நீங்கள் வாதம் என்ற பெயரில் ''தீர்ப்பு''சொல்கிறீர்கள்.உங்க கருத்து என்று சொல்லி விட்டால் அப்படியே அதை எல்லோரும் ஏத்துக்கணும்னு நெனைக்கீறீங்க போல இருக்கு,.முதலில் இந்த மேட்டிமை குணத்தை,உயர்வு மனப்பான்மையை விட்டொ ழியுங்கள்.

யாருடைய நெஞ்சம் மலம் சுமக்கிறது பார்க்கலாமா.பார்ப்பனியத்தை அதன் ஆதிக்கத்தை ஆதாரங்களோடு எதிர் கொள்ளும் நாங்களா.எதிர் தரப்பின் வாதங்களை மறுக்க துப்பு கெட்டுப்போய் ''இரண்டே படங்கள்தானா ''என்று பொருளற்ற வக்கணை பேசும்,எதிராளிகளை பொய்யர்கள் என்று ஆதாரமின்றி அவதூறு செய்யும்,பதில் சொல்ல முடியாத நிலையில் கையாலாகாத ஆத்திரம் தலைக்கேறிப்போய் '' மன நலம் அற்றவர்கள்'' என எதிர்த்தரப்பின் மீது பாய்ந்து குதறும் நீங்களா.
ப்ரணா
திரு. திப்பு அவர்களே,

இரண்டு வாரங்களாக உங்கள் நகைச்சுவை விருந்தை ரசிக்கவே மறுமொழி தந்தேன்.... வேற எந்த hair-க்கும் இல்லை:)....நான் நிறுத்திக்கொள்கிறேன், ஆனால் உங்கள் நகைச்சுவை இந்த நாட்டுக்குத் தேவை...... நீங்கள் தொடருங்கள்....

"பெரியார் வாழ்க... பார்ப்பனியம் ஒழிக....பாலசந்தர் புகழ் ஒழிக...." உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கும் தொற்றிக் கொண்டு விட்டது... இந்த இரு வாரங்களில் நான் கண்ட பலன் இது தான்....

வாழ்த்துக்கள்
ப்ரணா
sam
i feel Bhramins have raised their bars in living....like what Tippu said, they won't do physical works which gives very less wage......
if you analyse this, when you do physical work, you need to drink to escape from pain or you need to take non veg for strength........ so when you don't go for physical work, we can come out of these faults......

Similarly they go for mind related works and eat Veg.....

I want to see this from +ve point and improve the life style instead of pulling all Brahmins down or just thrashing them with bad words.
Arun
Thiru Poorna avarkaluku,

Ungalai pola parpaniyam peni kaapavargaluku karuthiyalai karuthiyalaga ethir kolla theriyathu, yaaravadhu ungal meedhu kurai sonnal porukka mudiyamal orumayil thitta arambithu veeduveergal. Tipu avargal miga arumaiyaga vilakam koduthu irukiraar, adharku oru bathil solla thuppu illamal avarai thitta thodangi viteergal, ippo avar nagaisuvaiya rasikaraenu unga mada thanathai nirubichuteenga, neenga oru parpana irukanum, illa parpanarkaluku adimaiyaga iruka suyamaga mudivu eduthavara irukanum, ungala pondra aatkaluku parpaniyatha edthirthu padhivu potta kovam vara thaan seiyum, enna ungaluku karthiyaluku bathil solla oru karthum irukaathu, eppadiyavadhu parpanana uyarthil veikka ellathayum kanda padi thituveenga, ungala madhuri aatkal thaan engaluku polludhu pokkum nagaisuvayum tharukireergal, ungal nagaisuvai sevai mellum thodara en vaalthukal.
தஞ்சை ப்ரணா
திரு. அருண் அவர்களுக்கு,

என் பெயர் பூர்ணா கிடையாது, என் பெயர் ப்ரணா. பார்ப்பனர்கள் குற்றமற்றவர்கள் என்பது என் வாதம் அல்ல. அதே சமயம் ஏற்றத்தாழ்வுக்கு பார்ப்பனர் மட்டுமே காரணம் மற்ற மேல் ஜாதியினர் அப்பாவிகள் என்ற பிதற்றலையும் ஏற்க இயலாது, பார்ப்பனியம் செத்து வெகு காலம் ஆகிவிட்டது என்பதே என் வாதம்.அதிலிருந்து வெளியே வாருங்கள். இல்லாத எதிரியுடன் மிகப்பெரிய போர் தொடுத்து என்ன செய்யப் போகிறீர்? தனி மனித துவேஷமும், ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான கருத்து தீவிரவாதமும் தொடரும் வரை, என் நகைச்சுவை பணியும் தொடரும் - நன்றி - தஞ்சை ப்ரணா
Arun
Thiru Iparna avargaluku,

Ungal peyarai thavaraga ucharithatharku manikavum, parpaniyam sethu vittadhu endru neengal solluvadhu etru kolla mudiyatha oru vidayam, oru poonul arupirku thesiya paathukaapu satam paayum alavirku avargal adhikam irunthu kondu thaan irukirathu, etra thalavirku parpanam mattum karanam illai enpathu unmayae, mel thattu saathi makkalum avargaluku inyaga nadanthu koliraargal, aanal indru kovil karuvaraikul mel thattu saathi makalaal prevesikka mudiyathu, adhu parpanar kottaiyaga thaan irukirathu, etra thaalvu parpanaar idam thaan thondankukirathu, adhai neengal unara vendum. parpanam setha paambu endral neengalum naanum poojai seiyya mudiyuma ?
தஞ்சை ப்ரணா
என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி! - தஞ்சை ப்ரணா
MS Siddharth
Super Thipu sir, ovaru answerum satai adi. Please dont waste ur time and knowledge. Puriyatha mathiri nadikravangalukku enaikkum namma bathil poi serathu. Nice thing u have mentioned that no brahmins are in hard working jobs. Another thing what mr sam told is brahmins are veg eaters so they are doing brain works than physical. Its not true initially they are non veg only. They have given animal rituals and take them as food. After jainism and budhhism they changed to veg.
Prana
Arumaiyaana pathivu!
rajamaruthu
This is wrong statement you just see all KB movies
கேசவன்
வணக்கம்.தங்களின் கூற்று தவறானது.நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் வியாபார விஷயமாக கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் செல்வேன்.அங்கு வேறு வேலைகள் தெரியாத காரணத்தால் விபசாரம் செய்த (குடும்ப்த்திற்க்கு தெரிந்து)உண்மையான பிராமண குடும்பங்கள் நிறைய இருந்தன.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.