ஒரு ஊர்ல ஒரு சர்தார்ஜி நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி "டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே "யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார்ஜி வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார்ஜி கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார்ஜி அதிசய டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி "டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்ஜி.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!
- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
விடுதலைப் போரட்டத்தில் ஆங்கிலேயரை வீரமாக எதிர்த்ததில் சீக்கியர்களுடைய பங்கு அதிகம்.... சீக்கியர்கள் வீரதீரமாக போராடினவர்கள்.. .
"தைரியமாக தூக்குமேடைக்கு போவதே இந்தியத் தாயின் உணர்வுகளைத் தூண்டும். ஒவ்வொரு
தாயும் தன்னுடைய பிள்ளை பகத்சிங் போல ஆக வேண்டும் என்று விரும்புவார்கள் . நம்
நாட்டின் விடுதலைக்காத் தாங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துடிப்பவர்கள்
எண்ணிக்கை அதிகமாகும். ஏகாதிபத்தியத்தா ல் இந்தப் புரட்சியை எதிர்க்க முடியாது
அவர்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது "-என்ற பகத்சிங் ஒரு சீக்கியர்...
அவர்களை ஒரு கேலிப் பொருளாக்க ஆங்கிலேயர் கையாண்ட விதம்தான் சர்தார்ஜி ஜோக்குகள்....
ஆங்கில ஆட்சியில் , "சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில் மொத்தம் 121 பேர் தூக்கிலிடப்பட்ட னர் , அதில் 93 பேர் சீக்கியர்கள் ,உலகையே உலுக்கிய ஜாலியன் வாலாபக் படுகொலை சீக்கியர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதே"
இன்னமும் சீக்கியர்கள் அதிக அளவில் இராணுவத்தில்... .
சீக்கியர்கள் பிச்சை எடுப்பதை நீங்கள் இந்தியாவில் எங்கேயும் காணமுடியாது...
சீக்கியர்களை ஒரு கேலிப் பொருளாக்கி, சர்தார்ஜி ஜோக்ஸ் இரசிப்பதையும், படைப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்...
சமூக அக்கறை கொண்டதாக நாங்கள் எண்ணும் கீற்று இணயதளம் இதுபோன்ற படைப்புகளை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிற ோம்.......
So, Please don't use sarthar jokes....
In spite of all the sardarji jokes nobody among us can take them for a ride!
G.S, ALL INDIA RADIO, FM RAINBOW, PONDICHERRY
நீங்க எவ்வளவோ இடத்துக்கு போய் வந்து இருக்கிறீர்களே எங்கேயாவது ஒரு சர்தார் பிச்சைஎடுப்பதைப ் பார்த்திருக்கிற ீர்களா ? என்று கேட்டார் .நமக்கு மண்டையில் அடித்த மாதிரியிருந்தது .........அவர்கள ் சுயமரியாதைக்கார ர்கள். பெரியார் சொல்கிறார். பாரம் சுமந்து வந்ததால் சிரமப்பட்டு இருப்பேனே தவிர அது கேவலம் என்று எண்ணி வருத்தப்பட்டிரு க்கமாட்டேன்.
ஜாதி, மத, இன அடையாளத்தோட எவனும் போகமாட்டான்... இன்னும் எத்தன பேர் இதையே சொல்வீங்களோ..
பிரபல எழுத்தாளர் குஸ்வந்த்சிங், சிறந்த கார்ட்டூனிஸ்ட் அவர் கூட சர்தார்களை பற்ரி நகைசுவை துனுக்குகளை எழுதியுள்ளார்.
RSS feed for comments to this post