ஈடன் தோட்டத்தில் இருந்த ஏவாள், "தேவனே, எனக்கு ஒரு பிரச்னை, கேட்பீரா?" என்றாள்.

தேவன், "உனக்கு என்ன பிரச்னை ? சொல் ஏவாள்" என்று கேட்டார்.

"இந்த அழகிய தோட்டத்தையும், என்னையும் படைத்தீர்களென்று எனக்குத் தெரியும். ஆனால் நான் மட்டும் தனிமையிலிருக்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது" என்று ஏவாள் கூறினாள்.  

"சரி, அப்படியானால் உனக்காக ஒரு மனிதனை உருவாக்குகிறேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் பதிலளித்தார்.

ஏவாள், "மனிதனென்றால் எப்படியிருப்பான்" என்றாள்.

"அவன் ஒரு குறையுள்ள ஜந்து, முரடன், தான் என்ற அகம்பாவம் நிரம்ப உள்ளவன், யார் சொல்லும் கேட்காதவன். ஆனால், அவன் பெரியவனாகவும், வேகமாக ஓடக்கூடிய கட்டுமஸ்தான உடலை உடையவன் ஆவான். நன்றாக சண்டை போடவும், மிருகங்களை வேட்டையாடவும் தெரிந்தவன்" என்றார்.

"பரவாயில்லையே" என்று பதிலளித்தாள். 

"ஆனால் ஒரு எச்சரிக்கை" என்ற தேவன், "நான் அவனைத்தான் முதலில் படைத்தேன் என்று நீ அவனை நம்ப வைக்க வேண்டும்" என்றார்.   

Ref:Laughter, The Best Medicine, Reader's Digest, July, 1999

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.