மிகவும் வரவேற்கத்தக்க, தமிழர்களனைவரும் ஆதரவளிக்க வேண்டிய போராட்டம். தமிழர்களின் பாரம்பரிய மதங்களாகிய சைவமும், மாலியமும் (வைணவம்) தமிழாக்கப்பட வேண்டும். எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற சொத்துக்களாகிய ஆலயங்கள் தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். ஆலயங்களிலுள்ள தமிழர்களின் கலைச்சொத்துக்கள் பேணிப்பாதுகாக்கப் படவேண்டும். அதற்கு முதல் படி, தமிழர்கள் கைகட்டி வாய்புதைத்து வெளியில் நிற்காமல் கருவறைக்குள் புகவேண்டும், அதில் எந்த உண்மையான தமிழனுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலான தமிழர்களின் மதவுணர்வையும், சைவ, மாலிய சமயங்களும், இலக்கியங்களும் எந்தளவுக்கு தமிழர்களின் பண்பாட்டில், மொழியில், கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்து உள்ளது என்பதை உணராமல், பெரும்பான்மையான தமிழர்களின் மதவுணர்வைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும், அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கும், இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் பெரியாரிஸ்டுக்களும், இந்துக்கடவுள்களை மட்டும் மறுக்கும் திராவிடவாதிகளும் நடத்தும் இப்படியான போராட்டங்களுக்கு மத நம்பிக்கையுள்ள தமிழர்கள் ஆதரவளிக்கத் தயங்குவார்கள் என்பது தான் உண்மை. இப்படியான போராட்டங்கள் பெரும்பான்மை இந்துக்களாகிய தமிழர்கள் அனைவராலும் சாதி வேறுபாட்டை மறந்து நடத்தப்பட வேண்டியதே தவிர பெரியாரிஸ்டுக்களால் அல்ல. தமிழர்கள் கருவறை புகும் போராட்டம் கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களால் நடத்தப்பட வேண்டிய முக்கியமான போராட்டமாகும். அதை கடவுள் நம்பிக்கையற்ற திராவிட வீரர்களும், பெரியாரிஸ்டுக்களும் கடத்திக் கொண்டு போய் அவர்களின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைக்கு ஒரு கருவியாக்கி, சாதி வேறுபாடற்று தமிழர்களனைவரும் கருவறைபுகும் உரிமைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, பிசு பிசுத்துப் போகச் செய்து விடப் போகிறார்கள் என்பது தான் என்னைப் போன்ற சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என நம்பும் ஈழத்தமிழர்களுக்குக் கவலையைக் கொடுக்கின்றது.
S
sp.maragathaselvam
சைவமும் வேண்டாம் ,வைணவமும் வேண்டாம் ,அந்த நம்பிக்கை உள்ள மக்களை சமமாக நடத்து ,என்னும் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நடத்தும் இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
V
viyasan
எமது தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் கருவறைக்குள் நாம் நுழைய முடியாமலிருக்கின்ற கொடுமையைப் போக்கி, இழந்த எமதுரிமையைப் பெற வேண்டுமென நினைக்கிற, அந்தக் கோயில்களில் வீற்றிருக்கிற கடவுளர்களில் நம்பிக்கையுள்ள தமிழர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தால் தான் இந்த உரிமைப்போராட்டம் வெற்றி பெறுமேயல்லாது, கடவுள் நம்பிக்கையற்ற, பெரும்பான்மையான தமிழர்களின் மதவுணர்வைப் புண்படுத்துகிற, பெரியாரிஸ்டுக்களினதும், திராவிடவாதிகளினதும் இப்படியான போராட்டங்கள் எதிர்மறையான விளம்பரத்தைக் கொடுப்பது மட்டுமல்ல, பார்ப்பனர்களின் கைகளை மேலும் வலுப்படுத்தும் என்பது தான் உண்மை.
C
Chandar
#வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு#
NK
NARENDRA KUMAR
முக்கியமான விஷயம். அப்படியே மசூதி, தேவாலயம் பத்தி மறந்து போய் எதாவது அறிக்கை கொடுத்துடப் போறீங்க. வெறும் இந்து கோயில்களை, பார்பான்களை மட்டும்தான் திட்டணும். அப்பத்தான் உயிர் வாழ முடியும்.
C
Chandar
Mission impossible ?
R
raja
ano Kovai Ramakrishnanuku "Narendra Kumarum' karuvarikukla pogunumnu kastapadraru.
Ana Narendran Nan Suthiran enna kovilukul anupa vendamnu solraru.
Enna kodumai Narendran Ethu
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.