கீற்றில் தேட...

வருடங்கள் கடந்தாலும்
காத்திருப்புக்கள் முதிர்வதில்லை...
குழல்களில் சூடுவதான‌
ramprasath-poem-waitingகற்பனைகளின் பூக்கள்
இன்னும் பிறந்திருக்கவில்லை...

எப்போது பிறக்குமென்கிற‌
தகவலுமில்லை...

துணைக்கான‌ எதிர்பார்ப்புக‌ள்
துணைக‌ளிட‌ம் நிரைவேறுவ‌த‌ற்கில்லை
என்ப‌தே காத்திருத்த‌லில்
முடிகிற‌தென்ப‌தை துணைக‌ள்
நினைத்துப் பார்ப்ப‌தில்லை...

கவனிக்கப்படாத வண்ணங்களின்
கலவைகளால்
வ‌சீக‌ர‌ம் விரும்ப‌ப்ப‌டுகின்ற‌து...
தொலைக்க‌ப்ப‌டும் க‌ல‌வைக‌ளால்
த‌னித்தே விட‌ப்ப‌டுகின்ற‌ன‌
எதிர்பார்ப்புக‌ள்...

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)