மனித நடமாட்டமில்லாமல்
என்றுமில்லாத
மயான அமைதி
வீதியெங்கும் பரவியிருக்கும்.
நம்பிக்கையில்லாத நிலையில்
நாடுமுழுவதும்
எந்தக்கணத்திலும்
இருண்டுபோகலாம் என்ற
அச்சத்தோடு மௌனித்துப்போகும்.
அதி உயர்பாதுகாப்பு வலயத்தில்
இன்னும்...
இராணுவப் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டிருக்கும்.
அரச மாளிகைகளில்
பாராளுமன்ற வளாகத்தில்
விமான நிலையத்தில்
பொருளாதார நிலையங்களில்
பொது இடங்களில்
மக்கள் நடமாட்டம் இல்லாமல்
இராணுவ நடமாட்டம் அதிகரிக்கும்.
அவர்களின்...
சந்தேகத்துக்குரிய நபர்களாக
எதுவுமறியாத...
எங்கள் சகோதரர்களே
வழமைபோல
கைதுசெய்யப்படுவார்கள்.
அரச தொலைக்காட்சி
வானொலி
பத்திரிகைகளில்
இன்று...
மக்கள் வீதிகளில்
நடமாடவேண்டாம்
என அறிவிக்கப்படும்
சொந்தநாட்டுக் குடிமக்கள்
நடமாடக்கூட
சுதந்திரமில்லாத
அந்த நாள்தான்
அவர்களின்...
சுதந்திர தினம்...!!! 

த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.