கீற்றில் தேட...


கருக்கலிட்டு மினுங்கும்
சூரியன் தார்க்கொப்பளத்தில்
கால்பாவவொட்டாது கடும்வெயில் கொளுந்தும்
நிழல் பொசுங்கிய
கடுவெளியின் மரத்தடியில்
தாயின் மார்க்காம்பு ஞாபகத்தில்
விரல் சப்பித் துயிலாரும்
குழந்தை நினைப்பில்
அனல் வளவும் பாய்லரில்
தார்க்காய்ச்சிக் கொண்டிருப்பாள் தாய்.


ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)