நிழல்களின் பிடிவாதம் குறித்து

கண்டிப்பாக நான் உங்களுடன்

ஒரு விஷயத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்

 

ஆகக்கூடி அவைகளுக்குத்தேவை

ஒரு துளி வெளிச்சம், அவ்வளவுதான்.

பிறகு வளர்ப்புப் பிராணியின் வாஞ்சையுடன்

உங்கள் பாதங்களையே சுற்றிவரும்

 

கிளைத்துப்படரும் கொடிபோல

உங்களின் பாதங்களில் தஞ்சம் அடையும்போது

அதன் குளுமையை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்

 

நான் அவளுடன் இருக்கும் அந்தரங்கமான நேரங்களில்

ஒன்றிற்கு பல முறை தீர்மானித்துக்கொள்வேன்

நிழல்களின் இருப்பு குறித்து

 

நிழல்களும் நம்மைப்போல

சக நிழல்களுடன் பேசி சினேகம் வளர்க்குமா?

எனக்குத்தெரியாது

 

ஆனால் நான் தினமும் கடந்துபோகும்

இடுகாட்டுத்திடலில் எனக்கு மட்டும் கேட்கிறது

வீடு திரும்பாத நிழல்களின் மரண ஓலங்கள்

-பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.