Love failureஉதிர்ந்தும்
உலர்ந்தும் சரசரக்கும் இலையென
நீ
இல்லாத போதும்
இருப்பதாகவே காட்டிக்கொள்கிறேன்

வீட்டின் உட்பகுதியில்
சூனியத்தின் தழுவல்கள் நிறைந்து
ஆழ்ந்த நிசப்தத்தில்
வன்முறை அழைக்கிறது

இழுத்துவிடும் பெருமூச்சு
மீட்டுகின்றன உனக்கான அழைப்பொலியை

உன் இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்
பகிர்வுகள் பற்றி மௌனம்
பேசிக்கொண்டே இருக்கிறது

குழந்தையின் அழுகையைப்போல
சாத்தியிருக்கும் சன்னலுக்கு வெளியே
மழையும் வந்து செல்கின்றன

என்னில் நிறைந்து
கண்ணில் வடிகிறாய்

ரகசியமாய் பூத்துக்கிடக்கிறேன்
ஒரு பூவாக

வாசல் திறந்தே கிடக்கிறது
பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ. 

- அறிவுநிதி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.