பட்டுபுடவை தந்த மெழுகை

More articles by அனுஜன்யா

கதர் வாங்கி விளக்கேற்ற
தத்தம் கழுத்தில் தொங்கிய
பல வண்ண சுருக்குக் கயிறுகளுடன்
மேல்தட்டு அதிராமல் கைதட்டியது;
கோடீஸ்வரர்கள் இன்னும்
சில கோடீகள் ஈட்ட
அரசின் புதிய திட்டம்
இனிதே துவங்க
மூன்றுமுறை மணியடித்த ஓசை!
முதல் மணி அடித்தபோது
யாரோ ஒரு உழவன்
சுருக்கை சரிபார்த்தான்
இரண்டாம் மணி அடிக்கையில்
நகரின் துப்புரவுத் தொழிலாளி
நாறும் பாதாளத்தில் பிரவேசித்தான்
மூன்றாம் மணி ஒலிக்கையில்
கல்லுடைப்பவளின்
மூன்று வயது பிஞ்சு
மூடப்படாத ஆழ்கிணறில் வீழ்ந்தது
உயர் தேநீர் பருகுகையில்
நுனிநாக்கில் மொழிவிளையாட,
அடிவயிற்று பிரளயங்களுடன்
எதிர்கொண்டது ஆராய்ச்சி மணிக்கும்
வழியில்லாத பாவியினம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.