தேன்பருகித்
தாவிவிடும் வண்டதின்
இயல்பு விளங்காமல்
வினவும் பதினாரு வயது
பருவப்பூவிற்கு
நினைவடுக்குகளில் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும்
வாழ்க்கைப்பாடங்களைக்
கோர்வையாய் சேர்த்துப்
பழகிடாத நிலையில்
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
 
கட்டில் அடங்காத மனக்குரங்கை
அதன் போக்கில் விட்டு,
இன்றைய பொழுது
நம்பொழுது,
நாளையென்பது
பகல் கனவென்று,
காரணம் சொல்லி
சிற்றின்பங்களைக் கணக்கெடுக்கும்
இளந்தளிர்களுக்கு
வாழ்க்கையென்பது என்னவென்று
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
 
இப்படி
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது,
நம் வாழ்க்கையைக்
குறிப்பெழுதியிருக்கலாமென்று...
 
 - ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.