ஊருக்குள்
கொள்ளை நோய்
பரவுவதாக தகவல்
வந்த மறுநாள்
அரசாங்க அலுவலர்கள்
மாநாடு போட்டார்கள்.
நம்மூர் தட்பவெப்பநிலையில்
கொள்ளை நோய் பரவாது.
எப்படியும் கட்டுப்படுத்திவிடுவோம்
என்றார்கள்.
கொள்ளை நோய்
கண்டு அஞ்சற்க.
மாஸ்க்கால் வாயை இறுகி
மூடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்
மக்களை.
யாரோ கேட்டார்கள்.
என்ன பதில்
இது வரை
இறந்துப்போன உயிர்களுக்கு?
மாஸ்க்கால் கண்களையும்
மூடிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
- என்.விநாயக முருகன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- என்.விநாயக முருகன்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post