ஊருக்குள்
கொள்ளை நோய்
பரவுவதாக தகவல்
வ‌ந்த மறுநாள்
அரசாங்க அலுவலர்கள்
மாநாடு போட்டார்கள்.
நம்மூர் தட்பவெப்பநிலையில்
கொள்ளை நோய் பரவாது.
எப்படியும் கட்டுப்படுத்திவிடுவோம்
என்றார்கள்.
கொள்ளை நோய்
கண்டு அஞ்சற்க.
மாஸ்க்கால் வாயை இறுகி
மூடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினா‌‌‌ர்கள்
மக்களை.
 
யாரோ கேட்டார்கள்.
என்ன பதில்
இ‌து வரை
இறந்துப்போன உயிர்களுக்கு?
 
மாஸ்க்கால் கண்களையும்
மூடிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
 
- என்.விநாயக முருகன்

Comments

1 comment

1
nerudahumor
malethana nagaisuvai!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.