பாஷோவின் குளத்திற்குள்
குதிக்கிறது தவளை
க்ளக் .....

போன ஜென்மத்திலிருந்து
கண் விழிக்கிறேன்

முல்லையாற்றின் மீது
வாசல் தெளித்துக்
கொண்டிருக்கின்றன
இராத்தூறல்கள்

வெள்ளி வளையல்கள்
ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி
எழுகின்றன தோரணங்களாக

உயிர்களைப் படைக்கும்
கட்டற்ற புனைவு
திசை தோறும்
விரிந்து செல்கிறது இரவாக

இவ்வளவு கூர்மையான நிலவை
இதற்கு முன்பு
நான் கண்டதேயில்லை

நீர்க்குமிழ் போல்
முளைத்தெழும் மீனொன்று
நதிப் படுகையில்
சற்றே கண்ணசந்திருக்கும்
கடவுளைக் கடித்து விட்டு
நீரோட்டத்தில் பாய்கிறது

இப்போது என் குவிந்த
கரங்களுக்குள் தளும்பிக் கொண்டிருக்கும்
நதிக்குள்ளிருந்து
பளிச் பளிச்சென அயிரை மீனாக
குதித்துக் கொண்டிருக்கின்றன
முற்றுப் பெறாத காலங்கள்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.