குண்டு குழி
வாசலில்
நிலக் கூடுகள்
*
வாசல்
தேங்கிய நீரில்
நிலா கூடு
*
கூடு திரும்பும் பறவை
சிறகளவு வானம்
கொண்டு வந்திருக்கிறது
*
இலை அத்தனையும் விழுந்தாலும்
கோட்டோவியமாய்
கூடு பாயும் மரம்
*
ஆயிரம் போதிகள்
இருக்கலாம்
ஒரு புத்தன்தான் ஜோதி
*
இலையற்ற மரத்திலும்
இசைக்க மறுப்பதில்லை
பறவைகள்
*
ஒட்டி உரசிக்கொள்ளும்
இருவேறு கிளைகள்
மரத்தடியே காதலர்கள்
*
பிடித்த ஒரு வரி செய்யும்
ஓரியாட்டம் தான்
அந்த முழுக்கவிதையும்
*
அடுத்த பத்தடி
நடக்கச் செய்யுமானால்
கானலும் கருணையே
*
இத்தனை சுத்தம் ஆகாது
புகைப்படம் எடுத்த மறுநொடியே
தலை முங்கி எழுகிறது நீர்ப் பறவை
- கவிஜி