சிறகுலர்த்தும்
கரிச்சான் அலகில்
ஒட்டியிருக்கிறது
நேற்றைய மழையின் குளிர்.
கள்ளத்தனமாய் நின் காதோரம்
ஆடும் Black Metal ஜிமிக்கி
அவ்வப்போது என்னிடம்
ஜாடையாய் ஏதோ பேசுகிறது.
எதிர்பாராத உனது பார்வை போல
அவ்வப்போது சுள்ளெனத் தாக்கி
ஓடி ஒளிகிறது
மழைக்கால வெயில்.
கருக்கல் விலக்கி
மூடியும் திறந்தும்
இளவெயில் எட்டிப் பார்க்கிறது.
எதைக் கண்டோ
ஓயாது கீச்சிடும் அணிலாய்
உன் நினைவில்
கீச்சிடுகிறது மனது.
நீ என்பதே
எனக்கு மழைக்காலம் தானடி

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.