என் அருகாமை
உருவாக்கிய சொற்றொடர்களில்
கோடிட்ட இடங்களை
கடல் கடந்து
வந்த பின்னும்
நிரப்பச்சொல்லி
நிர்பந்தித்தது உறவு...
அவ்வாறே நிரப்பினேன்
கோடிட்ட இடங்கள்
காலியானது...
என் பணப்பையுடன்
சேர்ந்துகொண்டு...
முகமூடி அணிந்து
பழக்கப்பட்ட
தேர்வறையில்,
பாடங்கள் கவனிப்பாரற்று
மதிப்பெண்களே
பிரதானப்படும்போது
கோடிட்ட இடங்கள்
நிரப்புவதும் கடனே...
மறக்காமல் இருக்க
பாடம் புரியாமல்
மனப்பாடம் செய்வதுபோல...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட். (
கடன்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.