பரந்த இந்த தேசத்தில்
எல்லோருக்கும்
நான் வேராக இருக்கவே
பேராவல் கொண்டு
முயன்று வருகிறேன்.
எனினும்,
சிலர் என்னை படர் கிளையெனவும்,
விழுதாகவும்,
பசுந்தளிர் பரவும் கொடியாகவும்,
இளம் பிஞ்சாகவும்,
நறுமலராகவும் ,
கனியாகவும்,
கனியுதிர் விதையாகவும்,
ஆகாயத்தை மறைத்துப் பந்தலிடும்
குடை மரமாகவும்,
பழுத்த இலையெனவும்
ஏன் காய்ந்து மக்கிடும்
சருகாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால்
நான் வேராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
வேறாக அல்ல…
- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சி.திருவேங்கடம்
- பிரிவு: கவிதைகள்