விழியுறை பனிவிலக்கத்
திராணியற்று
வீழ்கிறது விடியல்கள்
விழியற்றவன் முன்

ஸ்பரிச முகவரியட்டையில்
அடையாளம் தேடியெடுத்தறிகிறான்
கரம் பிடித்து
கடக்க உதவியோரை

ஒலிச்சிற்பத்தின்
நேர்த்திகள்
உணர்த்துகின்றன
எதிர்ப்படும்
நண்பர்களை

தனிமைச் செங்கோல்
நடையென்றாலும்
அடர்வனம் நுழைந்த சிறுவனின்
மிரள்விழிகளை சாலையில்
வரைந்தபடியே செல்கிறது
விழியிழந்தவனின் தூரிகை

- கவிதா

Comments

1 comment

1
ஹாரூன்ஷா
மிக அருமையான கவிதை.கவிதை என்பது படித்தவுடன் புரிவதைவிட படிக்க படிக்க புரிதலை தூண்டி விடுவதே.அருமை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.