இரவு நேரங்களில்
பூதமாய் மிரட்டிக் கொண்டிருந்தது
அந்த பைத்தியக்காரியின் அலறல் சத்தம்;
பயமின்றி நடமாடித் திரிவதால் அவள்
பக்கத்தில் வருவதில்லை
எவரொருவனும்

முன்னொரு பொழுதில்
வேகங்குறையாமல் உழைக்கத் துணிந்தவளை
சேரியோர கள்ளியென நினைத்து
ருசிபார்க்கத் துணிந்தது அய்யாவீட்டு காளைகள்
மாட்டையடித்து கூறுபோடுகிறவளென தெரியாது
செவக்காட்டுக் கரையில் வழிமறைக்க
பேரிருட்டில் பெருங்குரலெடுத்து
கதறித் துடித்தது எஜமானியின் வாரிசுகள்

தொட்டணைத்த கைகளை
சட்டென வெட்டியெறிந்துவிட்டு
புறமுதுகிட்டு ஓடாது
இரு கைகளையும் வீசி நடந்தாள்
பைத்தியக்காரியென பிரகடனப்படுத்தியது
ஊர்ப் பஞ்சாயத்து

இன்றும்
பயமறியா பைத்தியக்காரியாய்
ஒற்றையடிப் பாதையை கடந்து போகிறாள்
இருளோடு பரவியலைகிறாள்...
இருள் அவளோடு சேர்ந்தலைகிறது...

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.