"யார்?" என்று கேட்டதற்கு
"நான்" என்று
சர்வ சாதரணமாகப்
பதில் அளித்துப் போகிறான்,
"நான்" என்பது "யார்"
என்பதைக் கொஞ்சமும்
அறிந்திராமலும் ஆராயாமலும்..

பிறப்பு முதல் இக்கணம் வரை
புலன் வழி சேகரித்துச்
சேமித்த தரவுகளின்
கனத்தோடு
நான் சுமக்கும் "நானு'ம்
சேர்ந்து அழுத்த
நசுங்கித் தவிக்கிறது
ஆழ் மனதின் அமைதி.

- ஆதியோகி 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.