குற்றவாளிகள் அல்ல
சட்டங்கள் தான்
சிறையில் அடைக்கப்படுகின்றன

அநியாயங்கள் அல்ல
தர்மங்களூம் நியாயங்களுமே
தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றன

புத்திசாலித்தனமாய்
திருடுகிறவனுக்கே
புகழ்மாலை சூட்டப்படுகிறது

கறைபடிந்த உள்ளங்கள்தான்
வெள்ளை வேட்டியால்
அலங்கரிக்கப்படுகின்றன

கடமைபோய் காசுதான் வேலை செய்கிறது
கண்ணுக்குட் தெரிந்தே
கற்புகள் பறிபோகின்றன..

காலம் மாறிவிட்டது
பழகிகொள்ளுங்கள்
அல்லது
பழக்கப்படுத்துங்கள்

பழைய மனங்களையும்
பழைய உண்மைகளையும்...

More articles by வாசகன் வெங்கடேசன்

Comments

1 comment

1
Rajasekaran Arumugam
NICE AND FACT

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.