கடனக் கேட்டு சின்னாண்ட ஆளனுப்புவாரு
நான் இல்லன்னு சொல்லிடென்று
வாசல் தெளிக்க சென்றவளிடம் சொல்லி
காய்ந்து கிடக்கும் வயக்காட்டுப் பக்கம்
தலைமறைவானான்
இரை தேடி வந்த
தவிட்டுக்குருவியின் கால்
வெடிப்புகளில் மாட்டி
பனியில் நனைந்தபடி படுத்திருந்ததை
எடுத்து வந்து மஞ்சள் பத்திட்டு
தின்ன நொய்யரிசித் தூவி
துண்டை நனைத்து வயிற்றில் கட்டி
சித்தெறும்புகள் ஊறிக்கொண்டிருக்கும்
பின் திண்ணையில் படுத்துக்கொண்டவனை
மேய்ந்து கொண்டிருந்தது சூரியன்.

- சிவ.விஜயபாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.