நெடுஞ்சாலையோரமாய்
குற்றுயிராய்க் கிடக்கும்
ஒருவனின் குருதி
என்ன நிறமென்று
கூடிக் கூடிப் பார்த்து
செல்லலாயினர்
மக்கள்.
___________________

ஒரு
பிரதான சாலையோரம்
வீழ்ந்து கிடக்கும்
ஓர் இன்றைய பிணத்தை
கடந்து சென்று கொண்டிருக்கின்றன
நாளைய பிணங்கள்.
__________________________

நெடுஞ்சாலையோரம்
அமையப் பெற்றிருந்த
மோட்டலில் பசியாறிய
ஒரு தோசைக்கு
அறுபது ரூபாயென
பில் நீட்டினான் வெயிட்டர்
இனி அங்கு செல்லப் போகும்
எல்லா தடவைகளுக்குமாய் சேர்த்து
என் கைகளை அழுந்தத் தேய்த்து
கழுவலானேன் நான்.

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.