கீற்றில் தேட...

night 533

அறைக்கதவை ஊமையாகத் திறந்தடைத்தேன்
பரந்து விரிந்து கிடக்கிறது இருள்.

இரவு இரம்மியத்தில் லயித்து
உற்றுப் பார்க்கையில்தான் மெல்ல
என்னோடு பேசத் தொடங்கியது
கடல்.

கொழுத்த உரையாடல் குமட்டுகையில் மெல்ல நழுவுகின்றன
இருளும் அவனும்.

கேலிகளில் இருந்து தப்ப- எந்த
நாயும் துரத்தாது
இப்படி
நான் ஓடுவதை யாரும்
பார்க்காமல் இருக்கட்டும்.

பூட்டிய கதவைத் திறக்கிறேன்
விழித்திருக்கிறது வீடு-மறுகணமே
வீட்டை உள்ளேயும் என்னை வெளியேயும் வைத்து
அறைந்துகொள்கிறது கதவு.

- வீ.ரமேஷ் குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.