*
நீ
சொல்லாத ஒரு வார்த்தையின்
அடர்த்தி
எனது இரவைத் தூங்கவிடாமல்
விடிய வைக்கிறது
நீ
சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தையின்
வெப்பம்
எனது பகலை என்னோடு
எரிய விடுகிறது
நீ
சொல்ல முயலும் ஏதோவொரு வார்த்தை
எனக்கான
மிஸ்டு காலின் அதிர்வோடு
அடங்கிப் போகிறது
நீண்ட அயற்சிக்குப் பின்
மை தீர்ந்துப் போன
ஒரு பேனாவின் உதறலோடு
நினைவு சிதறும் பிறிதொருநாளில்
பிரிக்கப்படாத ஒரு கடிதமாக
படிக்க விரும்பாத ஒரு துயரமாக
நீ
சொல்லியிருக்கும் வார்த்தைகள்
மொத்தமும்
இன் பாக்ஸில் தேங்குகிறது
****
-- இளங்கோ (
கீற்றில் தேட...
மை தீரும் பேனா..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்