நித்தம் நித்தம் நினைக்கும் போதும்
நெஞ்சம் துடிக்கிறது -உன்
நிழற்படம் காணும் பொழு தெல்லாம்
நொறுங்கிப் போகிறது.
புறம் பாடித் திரிந்த தமிழனின்
புதல்வன் இன்று களத்தில்
விழுப்புண் தாங்கிக் கிடந்தது
வீரத்தின் விளைநிலமாம்.
கண்ணை மூடி துயில நினைத்தாலும்
கண்ணிமையில் உன்னுருவம் - வாழ்வின்
ஆயிரம் கனவுகள் தாண்டி
அந்த நிமிடம் என்ன நினைத்தாயோ
என் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் உருவம் தானே விரிகிறது - அவனை
வாரி யணைத்துக் கொள்கிறேன் ,
வக்கற்ற தமிழ்ப் பிள்ளை நான்.
ஆயிரமாயிரம் பிள்ளைகள் விதையாயினர்
அந்த நிலத்தில் நாதியற்று - ஆயினும்
உன் மரணத்தை மட்டும் ஏனோ
மனம் செரிக்க மறுக்கிறது.
விதையாய் வீழ்ந்தது என்றும்
வீணாய்ப் போகுமோ - நம்
இனம் அழித்தவனின் கொடி வீழும்
குலம் அழியுமிது சத்தியம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- வ.இரா.தமிழ் நேசன்
- பிரிவு: கவிதைகள்