நீ தமிழன்

நானும் .

நீ இந்து

நானும்.

நீ உழைப்பாளி

நானும்.

நீ கருப்பு

நானும்.

நீ சுரண்டப்படுகிறாய்

நானும்.

பயிர்க்கடன் சுமையால் நீ

தற்கொலை செய்துகொள்கிறாய்.

நானோ

நிலமற்றவன்.

நீயும் நானும்

சீரழிவதற்கென்றே

திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன

மதுக்கடைகள்.

 

எது எப்படி இருந்தாலென்ன...?

உன் காலடியின்கீழ்க் கிடக்கவேண்டும் நான்.

உன் தோள்மீது அமர்ந்திருப்பவன் குறித்து

ஒரு கவலையுமில்லையுனக்கு.

Comments

1 comment

1
ki.charles
Nandraga ullathu.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.