வானவில்லின் வர்ணங்கள் மறந்தே போய்விட்டது
இடிக்கும் மின்னலுக்கும் பயந்து வெகு நாளாகிவிட்டது
ஒழுகும் கூரை வேய அவசியமே இல்லாமல் போனது

அடித்துப் போன மழையின் மிச்சத்தில்
காகித கப்பல் மிதத்தி பல காலம் ஆயிற்று
வீட்டின் பின்னால் கேட்கும்
ஓடையின் சலசலப்பும் தவளை சத்தமும் கூட நினைவில் இல்லை

அடைமழை தந்த விடுமுறையும் இல்லை
வெளிச்சம் தேடி வந்த ஈசலின் சிறகும் மிச்சமில்லை
கூரையில் வழிந்தோடும் மழைநீரில்
கை நனைத்த ஜில்லிப்பு மட்டும் இன்னமும் மங்கலாய்!!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.