நேற்றைய பொழுதுகள்
கனத்துவிட்டன‌
சுமையேறிய மூளையில்
கடவுளைத் தொழுத கண‌ங்கள்
காயப்பட்டுக் கிடக்கின்றன‌

செல்லரித்த
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"

Comments

2 comments

2
ரமேஷ் பிரான்ஸ்
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"///
தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு......
வாழ்த்துக்கள் நண்பரே.......ரமேஷ் பிரான்ஸ்.
குறிஞ்சி மைந்தன்
சொற்களை கலைத்து போட்ட கவிதையாக எனக்கு பட வில்லை. ஒரு வாழ்வு ஏங்கி தவித்த சூழலை, ஒரு உயிர் சுமந்த மன கச்சையாக எனக்கு இந்த கவிதை உணர்த்துகின்றன. மேலும் படைப்புகளை உலவ விடுங்கள் கீற்றில்... அன்புடன் குறிஞ்சி மைந்தன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.