கீற்றில் தேட...

எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.

சில நாட்கள் கழித்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப் பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்

சில நாட்களாக பச்சோந்தியைக் காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.

சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.

இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப் பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)