பிரவாகமாக ஓடி கொண்டிருக்கையில்
அருவியாய் பாறைகளில் புகுந்து
வந்த வலிகளை சொல்ல வேண்டியதில்லை
யாருக்கோ ஊக்கமளிக்கும் என்றாலொழிய..
கடலுக்குள் கலந்த அமைதியில்
பிரவாகமாக ஓடிய பிரபாவத்தை
சொல்லுகிற தேவையும் இருக்காது.
அதிகபட்ச வலி மிகுந்த கதையொன்றை
சொல்லியே ஆக வேண்டுமெனின்
ஊற்றாய் புறப்பட வேண்டியதை
மலை உச்சியிலிருந்து தள்ளி ஓடவிட்ட
துரோகத்தை வேண்டுமானால் சொல்லலாம்.
- சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- கே.சித்ரா
- பிரிவு: கவிதைகள்