நகர்ந்து கொண்டேயிருக்கும் ஆறு
ஆற்றின் அடியில் கிடக்கும்
கூழாங்கற்களை சிறிது புரட்டிப்போடுகிறது

விடாமல் காற்றுக்கு
தலையசைத்துக்கொண்டேயிருக்கும்
மரக்கிளைகள், அமர்ந்திருக்கும்
பறவைகளை கொஞ்சம்
அலைபாயச்செய்கின்றன

பறந்து கொண்டேயிருக்கும் பறவை
வெய்யிலின் கதிர்களை படுக்கை வசமாக
நறுக்கிக்கொண்டு பறக்கின்றன

இடம் மாறிக்கொண்டேயிருக்கும் மேகங்கள்,
தங்கள் உருவத்தையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டு
கீழிருக்கும் வயல்களை நனைத்துச்செல்கின்றன

அலைந்து கொண்டேயிருக்கும் மனது
என்னை வேறு எதையும் செய்யவிடாமல்
வெறுமனே அலைக்கழித்துக்கொண்டேதானிருக்கின்றது.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.