அங்காடியில் அங்கலாயித்த
அன்பு மகன் உடனிருக்க...
அன்றைய நாட்கள் - என்
அன்பையெல்லாம் ஒருங்கே பெற்ற
அவளைக் கண்டேன்...
அவள் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலம் போய்-
கண்ணுக்கு எட்டிய தூரத்தை
கடந்து சென்றவளை-
கடைவீதியில் கண்டிருக்கும் இன்று
ஒரு வரமாய்தானிருக்கும்...
நரையோடிய கூந்தல்,
கருவிழந்த கண்கள்,
கையில் ஒன்றாய்,
இடுப்பிலொன்றாய்,
இரு குழந்தைகள்....
காதலும் காமமும்,
கடந்த பின்னும்...
அந்த நாள் நினைவுகள்
மீதூறும் போது...
இன்றும்,
என் மனக்கண்ணில்....
நீ தான் அழகு.