பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு.
ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்.
விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்துக் கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை.
முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.
பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்கள் நோக்கி
நகர்கின்றன.
வாயகன்றுக் காத்திருக்கும்.
அலுவல்களின் இரையென
- இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி
- ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!
- காணாமல் போகும் கழுகுகள்
- ஊழல்... ஊழல்... பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!
- மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!
- காதல் தாண்டவம்
- சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்