நல்லதொரு இடத்தில்
எனை நட்டுவைத்து
வளர்க்கப்போவதாய் பறைசாற்றி
சின்னதாய் பாலித்தீன் கவரில்
மண் நிரப்பி
என் வேர் மட்டும்
புதையுமாறு
பார்த்துக் கொண்டாய்.

தினமும் சில நிமிடங்கள்
வெய்யிலில் காட்டுகிறாய்.
உன் அலுவல் பரபரப்பில்
களவு போய்விடுவேனோவென்று
கதவுகளுக்குள்
இடம்பெயர்க்கத் தவறுவதில்லை.

என்னை வாங்கிவருகையில்
ஸ்கூட்டரில்
உனது கால்களுக்கிடையில்
கெட்டியாகப் பற்றிவந்த போது
உன்வீட்டில் வளர்வதையே
விரும்பினேன்.

ஆனால்
ஒரு குழந்தையை
அன்பு செய்யத்
தெரியாதவன் வீட்டில்
எந்த மரமும் தழைப்பதில்லை
என்கிற விதியை மெய்ப்பிப்பதற்காகக்
கருகி மடிகிறேன் நான்.

Comments

1 comment

1
வ.க.கன்னியப்பன்
அன்புள்ள ஆத்மார்த்தி,

உங்கள் 'பேசும் பணச்செடி' கவிதை எனக்குப் பிடித்திருந்தது. இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ஸ்பெஅகிங் மொனெய் ப்லன்ட் என்று பொஎம்ஹுன்டெர்.சொம் என்ற இணைய தளத்தில், தங்கள் பெயர்க் குறிப்புடன் பதிவு செய்திருக்கிறேன். நன்றி.

டாக்டர்.வ.க.கன்னியப்பன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.