எத்தனை விந்தை
தெரியுமா தண்ணீர்?

பத்துமாதம் கருவறையில்
எவரும் நீந்தியிருக்கலாம்...
ஆனால், கடலில் நீந்தக்
கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...

விந்தைகளின் சந்தை
தண்ணீர்...

கரை உலர்கையில்
நனைக்கிறது அலை...

உடல் உலர்கையில்
வியர்க்கிறது உடல்...

ந‌னைக்காவிடில்
உள்வாங்கியிருக்கும்...
விய‌ர்க்காவிடில்
உயிர் வாங்கியிருக்கும்...

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It