பிள்ளைப் பருவம்
முடிக்கும் தருணத்தில்
பிறந்துவிடுகிறது
அவர்களுக்கான
முகமூடி...

இதற்குள்
அவர‌வர்கள்
அவர‌வர்களுக்கு
நல்லவர்களாகவே
தெரிவார்கள்...

அதற்குள் உள்ளே
எப்போதுமே
மறைந்திருக்கும்
ஒரு சொல்லப்படாத
மெய்....

அதற்குள் வெளியே
எப்போதுமே
அலைந்திருக்கும்
ஒரு சொல்லப்பட்ட
பொய்....

காலச் சக்கரம்
தயாரித்துக் கொண்டிருக்கிறது
புது முகமூடியை
மற்றொரு பிள்ளை
பருவம் முடிக்கும்
குழந்தைக்காக...

Comments

3 comments

3
Muthuraman
Vaazthukkal Nanbarae!! Nanjil kavithai ini nadengum...
hari
dai kalakura tamil pulavar da nee i am very proud of my sathish
mani ramalingam
@muthuraman, hari..... mikka nandri...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.