*
ஒரு முறையாவது சொல்லிப் போ
தீயில் எரியும் என் கனவின் கதவில்
உன் இலக்கம் எத்தனை..

வானம் கிழிந்து
நிலவு வழிந்தத் தடத்தில் உன் காலடிச் சுவடு எது..

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்
சிறகு உதிரப் பறத்தல்
வாய்ப்பதில்லை

எழுதுகிற குறிப்பின் நிழலில் மறைகிறது
கால் புள்ளி - அரைப் புள்ளி -
மற்றுமொரு முற்றுப்புள்ளி

நீயற்றுப் போகும் இடைவெளியில்
எல்லாம் எரிகிறது..

சொல்லிப் போ
உன் இலக்கம் எத்தனை..!

****
- இளங்கோ

Comments

1 comment

1
Ko.maa.ko.Elango
miha miha arumai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.